திடீர்னு கறிகடையில் புகுந்து அரிவாளை எடுத்த நம்ம ஜெயக்குமார்.. அண்டாவை திறந்து.. பரபர வண்ணாரப்பேட்டை
கறிக்கடையில் நுழைந்து வாக்கு சேகரித்தார் ஜெயக்குமார்
சென்னை: தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயக்குமார் திடீரென அரிவாளை எடுத்தார்.. பீஸ் பீஸ்ஸாக மட்டனை வெட்டினார்.. அண்டாவை திறந்து பார்த்தார்.. துணி தைத்து தந்தார்.. இறுதியில் அனைவரிடமும் வாக்கு சேகரித்தார்.. இதனால் வண்ணாரப்பேட்டையே இன்று படுபிஸியாகிவிட்டது.
நகர்ப்புற தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.. ஆளுக்கு ஒரு பக்கம் தமிழகத்தின் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்த முறை திமுக மட்டுமே கூட்டணியாக போட்டியிடுகிறது.. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட பல கட்சிகள் தனித்தனியாகவே களம் காணுகின்றன..

அரிவாள்
பெரும்பாலான இடங்களில் வென்றாக வேண்டிய கட்டாயம் அனைத்து கட்சிகளுக்குமே இருப்பதால், வாக்காளர்களை கவரும் வகையில், தங்களுக்கு தெரிந்த யுக்தியை கையில் எடுத்து வருகின்றனர்.. மக்களை கவரும் வகையில், பல்வேறு உத்திகளை செய்து வாக்கு கேட்டு வருகின்றனர்.. அந்த வகையில், மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கையில் அரிவாளையே எடுத்துவிட்டார்.

எப்படி?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 48 மற்றும் 53 வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அப்போது ஒரு வீட்டிற்கு சென்ற அவர், அங்குள்ள பெண்மணி டைலரிங் மிஷினில் துணி தைத்து கொண்டிருப்பதை பார்த்தார்.. உடனே இவரும் அந்த மிஷினில் உட்கார்ந்து துணி தைத்தார்.. தைத்து முடித்ததும் "எப்படி?" என்று அங்கிருந்தோரை கேட்டார்.. அவர்கள் அனைவரும் கைகளை தட்டினார்கள்.. பிறகு அந்த குடும்பத்தில் உள்ளவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

மட்டன்
இதேபோல் கடைதெருவில் நடந்து வந்து கொண்டிருந்த ஜெயக்குமார், அங்கிருந்த மட்டன் கடைக்குள் நுழைந்துவிட்டார்.. அரிவாளை எடுத்து மட்டனை துண்டு துண்டாக வெட்டினார்.. ஆனால், அந்த மட்டன் ஏற்கனவே வெட்டப்பட்டுதான் இருந்தது.. அதில் இருக்கும் துண்டை எடுத்து, இவர் இன்னும் சிறிய துண்டாக வெட்டினார்.. பிறகு பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கைகளை கழுவி கொண்டார்.. கறி வெட்ட வந்த ஜெயக்குமாருக்கு அந்த பகுதியில் உள்ள பெண்கள், ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இறுதியில் அனைவரிடம் வாக்கு சேகரித்தார்.

சாம்பார் அண்டா
பிறகு அந்த சாலையில் தள்ளுவண்டி கடை ஒன்று இருந்தது.. அங்கே நிறைய பேர் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.. அங்கு சென்ற ஜெயக்குமார், டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த சாம்பார் அண்டாவை திறந்து பார்த்தார்.. பிறகு, அங்கு வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டையெல்லாம் பார்த்து, கடை குறித்து விசாரித்தார்.. அந்த கடையில் இருந்த அத்தனை பேரிடமும் வாக்கு சேகரித்தார்..

பாதுகாப்பு
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, வழக்கம்போல் திமுகவை விமர்சித்தார்.. அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்திக்கவே திமுகவினர் தயங்குகிறார்கள், அதனால், அதிமுக மகத்தான வெற்றியை பெறும், அதிமுக ஆட்சியில் அமைதிப்பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் இப்போது தனி மனிதனுக்கே பாதுகாப்பு இல்லை என்று லிஸ்ட் போட்டு குறைகளை சொல்லிவிட்டு, அங்கிருந்த மக்களிடம் வாக்கு கேட்டுக் நகர்ந்து சென்றார் ஜெயக்குமார்..!
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications