கருணாநிதியால்தான் எம்ஜிஆர் உயர்ந்தாரா? நடிகர் ரஜினிகாந்த் பேச்சுக்கு எதிராக திரண்ட அதிமுக 'தலை'கள்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உயர்வு பெற்றார் என நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சரமாரியாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், கருணாநிதியால்தான் எம்ஜிஆர் உயர்வு பெற்றார் என கூறியிருந்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் கூறியதாவது: அண்ணா மறைந்த போது திமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்சனை வந்தது. அப்போது நெடுஞ்செழியனையே முதல்வராக்க வேண்டும் என பலரும் கருத்து முன்வைத்தனர். ஆனால் எம்ஜிஆர்தான், முரசொலி மாறன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து கருணாநிதியை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வராக்கினார். எங்கள் தங்கம் திரைப்பட விழாவிலேயே கருணாநிதி இதை வெளிப்படையாகவே பேசினார். இந்த வரலாற்றை மறைத்துவிட்டு பேசக் கூடாது. கருணாநிதி முதல்வர் பதவியில் அமர காரணமே எம்ஜிஆர் மட்டுமே முழுமையான காரணம். இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு.
கருணாநிதியால்தான் எம்ஜிஆர் உயர்ந்தார் என ரஜினிகாந்த் பேசியிருப்பதை தமிழ்நாடு ஏற்குமா ? எம்ஜிஆர் ரசிகர்கள்தான் ஏற்பார்களா? திமுகவில் எம்ஜிஆர் இருந்தவரைதான் கருணாநிதி பதவியில் இருந்தார். எம்ஜிஆர் திமுகவை விட்டு வெளியேறியதால் கருணாநிதி அமைச்சராகவும் முடியவில்லை. முதல்வராகவும் முடியவில்லை. கருணாநிதியை 11 ஆண்டுகள் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர் என்பதுதான் வரலாறு. கருணாநிதியை புகழ்வதற்காக வரலாற்றை தவறாக மறைத்து ரஜினிகாந்த் பேசியது வருத்தம் தருகிறது. ரஜினிகாந்த் இப்படி பேசியிருக்கக் கூடாது. இவ்வாறு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் தெரிவித்தனர்.
மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு 50,000 இருக்கைகள் போட்டிருந்தனர். ஆனால் வெறும் 899 பேர்தான் விழாவுக்கே வந்திருந்தனர். இதனைவிட கருணாநிதியை வேறுவகையில் அவமதிக்க முடியுமா? ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் எழுதிக் கொடுத்த உரையை வாசித்துவிட்டு வந்துவிட்டனர் என குறிப்பிட்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
‘துரந்தர் 2’ படத்தை பார்த்து ரஜினி போட்ட போஸ்ட்.. இயக்குனர் செய்த எதிர்பாராத சம்பவம்! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications