நிவாரணப் பணிகளில் ராம் மோகன் ராவ் பாசறை... தெலுங்கு பேசும் மக்களை வளைக்கும் பணி
சென்னை: தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் பாசறை சார்பில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அண்மையில் கூட திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு ராம் மோகன் ராவ் ஏற்பாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. அரசாங்கத்தில் உச்ச பதவிகளில் இருந்துவிட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ள ராம் மோகன் ராவ் சமுதாயம் சார்ந்த பணிகளில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் தனது பெயரில் இயங்கும் பாசறையின் கீழ் தெலுங்கு பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் பணியை அவர் கையில் எடுத்துள்ளார். மதுரை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களை கூட அவர் நடத்தியிருக்கிறார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ராம் மோகன் ராவ் 1985-ம் ஆண்டு ஐ ஏ எஸ் பேட்ஜ்ஜை சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றி இறுதியாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியை தொட்டவர். இவர் தலைமைச் செயலாளராக இருந்த போது தான் ஜெயலலிதா மரணம், சசிகலா சிறைவாசம், தலைமைச் செயலாளர் வீட்டிலேயே ரெய்டு, என பல முக்கிய நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறின.
தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ். வாய் திறக்காததால், ''அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா.. இப்போது உள்ளவர்களுக்கு அதைப்பற்றி பேச துணிச்சல் இல்லை'' என விளாசினார். பின்னர் தலைமைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அதிகாரமில்லாத டம்மி பதவிக்கு மாற்றப்பட்ட சில மாதங்களில் ஓய்வு பெற்று விட்டார் ராம் மோகன்.
தனக்கு இக்கட்டு நேர்ந்த காலத்தில் தனது சமுதாய பிரமுகர்கள் மட்டுமே பக்கபலமாக இருந்ததால் அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கச்செய்வேன் என சூளுரைத்து இப்போது அதற்கான பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார் ராம் மோகன் ராவ். அந்த வகையில் தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய இடங்களை பட்டியலிட்டு அங்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு தனது பாசறை நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே ராம் மோன ராவ் ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு அரசியல் ஆலோசகராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications