தியாகத்தலைவியா..? சசிகலா அப்படி என்ன தியாகம் செய்தார்..? சொல்லுங்க... ஜெயக்குமார் ஆவேசம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தியாகத்தலைவி எனக் கூறிக்கொள்ளும் சசிகலா அப்படி என்ன தியாகம் செய்திருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வினவியுள்ளார்.

Recommended Video

    சசிகலாவுக்கு எதற்கு புரட்சி தாய் பட்டம் ? என்ன புரட்சி செய்தார்... சாடிய ஜெயக்குமார்

    கல்வெட்டில் பொதுச்செயலாளர் என சசிகலா பெயர் பொறிக்கப்பட்டிருப்பது சட்டப்படி தவறான செயல் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    மேலும், சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி 8 மாதங்கள் ஆகிறதே ஏன் இதுவரை ஜெயலலிதா நினைவிடத்துக்கு வருவதை அவர் தவிர்த்து வந்தார் எனக் கேட்டுள்ளார்.

    அதிமுக பொன்விழா

    அதிமுக பொன்விழா

    அதிமுக பொன்விழா கொண்டாட்டம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஒரு பக்கம் அதிமுக தலைமைக்கழகத்தில் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும், கொண்டாட மற்றொரு பக்கம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் சசிகலா கொண்டாடினார். இதனிடையே எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.

    ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    சென்னை மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும், அரசியலமைப்பு சட்டத்தையும் மீறி சசிகலா செயல்பட்டு வருவதாகவும் அவரால் தான் 1996-ம் ஆண்டு அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்திக்க நேரிட்டதாகவும் சாடினார். மீசை வைத்துக்கொண்டவர்கள் எல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிவிட முடியாது என்றும் அதேபோல் எல்லோரும் ஜெயலலிதாவாகிட முடியாது எனவும் கூறினார்.

    என்ன தியாகம்?

    என்ன தியாகம்?

    தியாகத்தலைவி என தன்னைக் கூறிக்கொள்ளும் சசிகலா, அப்படி என்ன தியாகம் செய்திருக்கிறார் என வினவிய ஜெயக்குமார், ஓ.பி.எஸ்.,-இ.பி.எஸ். தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக நல்ல முறையில் இயங்கி வருவதாக தெரிவித்தார். இதனால் அதிமுகவை யாராலும் எதுவும் செய்ய முடியாது என சவால் விடுத்தார்.

    ஏன் செல்லவில்லை?

    ஏன் செல்லவில்லை?

    பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி 8 மாதங்கள் ஆகிறதே, ஏன் இதுவரை ஜெயலலிதா நினைவிடத்துக்கோ அல்லது எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கோ அவர் செல்லவில்லை என வினவிய அவர், அதிமுக பொன்விழாவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நேற்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா வந்து சென்றுள்ளதாக விமர்சித்தார். இதனிடையே ஜெயக்குமார் ஒரு பக்கம் இப்படி பேட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், யார் மனதும் புண்படும்படி தரக்குறைவாக பேச வேண்டாம் என சசிகலா தனது ஆதரவாளர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+