சரண்டர் ஆகிட்டாரே.. பேச்சை கவனிச்சீங்களா? ‘சவுத் அதிருது’.. ஓபிஎஸ் மாஸாம்.. சொல்றது யார்னு பாருங்க!
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கான ரிசல்ட் 2024ல் கிடைக்கும் எனக் கூறியுள்ளார் ரவீந்திரன் துரைசாமி.
சென்னை : அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், ஈபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ்ஸுக்கு எந்த செல்வாக்கும் இல்லை எனக் கூறி வரும் கருத்துகள் பற்றி பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்த நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு இனி எந்த வாய்ப்பும் இல்லை என ஈபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர்.
ஈபிஎஸ் தரப்பினரின் இந்த வாதங்களை மறுக்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

சரண்டர் ஆன எடப்பாடி
கேள்வி : எடப்பாடி பழனிசாமி ஒரு சமூக ஆதரவு பெற்றவர், ஒரு சாதி ஆதிக்கத்தையே நிலைநாட்டுகிறார் என விமர்சிக்கப்படுகிறது. ஈபிஎஸ் மதுரையில் பேசும்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்குகிறேன் என்று பேசுகிறார். எல்லோரையும் அரவணைக்கத்தானே முயற்சிக்கிறார்..?
ரவீந்திரன் துரைசாமி : எதற்கு எடப்பாடி பழனிசாமி சரண்டர் ஆகவேண்டும்? தியாகி இமானுவேல் சேகரனா, முத்துராமலிங்கத் தேவரா என்ற விஷயத்தில் ஜெயலலிதாவே எந்தப் பக்கமும் சார்பாக முடிவெடுக்கவில்லை. ஆனால், ஈபிஎஸ் ஏன் ஒரு பக்கம் சரண்டர் ஆகவேண்டும்? முதுகெலும்பு இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறார். ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்காமல், சி.வி.சண்முகத்தின் பவர் பாலிடிக்ஸால் அவரிடம் சரண்டர் ஆனார் ஈபிஎஸ். இதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 2024ல் எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கான ரிசல்ட் கிடைக்கும்.

மாஸ் லீடர்
கேள்வி : எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்தியாளர் சந்திப்பின்போது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி அதிமுகவில் எதிர்காலம் இல்லை, அவரால் இனி ஒன்றுமே செய்ய முடியாது என மிகுந்த நம்பிக்கையாகப் பேசுகிறார்களே..
ரவீந்திரன் துரைசாமி : ஓ.பன்னீர்செல்வமும் இன்று ஸ்ட்ராங்காகவே பேசிக் கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் அனுபவம் வாய்ந்த தலைவர். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற விஷயங்கள் அவருக்குத் தெரியும். ஆனால், பெருந்தன்மையாக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறார். அமைதியாக சிந்தித்து செயல்படக் கூடியவர் ஓபிஎஸ். நான் ஓபிஎஸ்ஸை சந்திக்கும்போதே சொன்னேன், நீங்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் இப்போதைக்கு நீங்கள் தான் மாஸ் லீடர் என்று சொன்னேன். எடப்பாடி பழனிசாமி 2024ல் 15% க்கான தலைவராகத்தான் நிற்பார் என்பது எனது கணிப்பு.

2 மடங்கு ஓட்டு
கேள்வி : சசிகலா, தினகரனையே ஓரங்கட்டிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை எளிதாக ஓரங்கட்டி விடுவார் இல்லையா?
ரவீந்திரன் துரைசாமி : சசிகலா, வாக்கு வலிமையை நிரூபித்தவர் அல்ல. தினகரனை ஓரங்கட்டியதில் பன்னீர்செல்வத்தின் உதவியும் இருந்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்துதான் தினகரனை ஓரங்கட்டினார்கள். இப்போது தோற்றுப் போயிருக்கும் ஈபிஎஸ்ஸுக்கு, ஓபிஎஸ்ஸுக்கும் என்ன செல்வாக்கு என்பதைத்தான் பார்க்க வேண்டும். மக்கள் மன்றத்திற்குள் போகும் இந்த ஃபைட்டை 2024 தேர்தல் தான் முடிவு செய்ய வேண்டும். ஈபிஎஸ் தரப்பு நினைப்பது போல தேர்தல் ஆணைய வெப்சைட்டில் ஏறாது. சின்னம் முடங்கவும் வாய்ப்புள்ளது. சின்னம் முடங்கினால் ஓபிஎஸ் அதிக வாக்குகளை எடுப்பார். டிடிவி தினகரனை விட 2 மடங்கு ஓட்டுகள் அதிகம் எடுப்பார். எல்லோர் வைக்கும் கணிப்புக்கும் 2024ல் தான் ரிசல்ட் தெரியும்.

இந்த ரிசல்ட் கணக்கே இல்லை
கேள்வி : இனிமேல் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என்றெல்லாம் இல்லை, அதிமுக ஒன்றுதான், அது நாங்கள் தான் என்கிறார்களே எடப்பாடி தரப்பினர்..
ரவீந்திரன் துரைசாமி : ஓபிஎஸ்ஸுக்கு எவ்வளவு ஓட்டு, ஈபிஎஸ்ஸுக்கு எவ்வளவு சதவீத ஓட்டு என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். திண்டுக்கலில் எம்ஜிஆர் ஜெயித்தார். அதே தேர்தல் சென்னையிலோ, தஞ்சையிலோ நடந்திருந்தால் மூன்றாவது இடம் கூட போயிருப்பார். பெருந்துறையில் வைகோ இரண்டாம் இடம் வந்தார். அதுபோல, எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் நான்கைந்து தொகுதிகள் தான் இருக்கும். அதனால், ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் ரிசல்ட்டெல்லாம் கணக்கே இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு அளவில் என்ன செல்வாக்கு என்பதைப் பார்ப்போம்.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன் -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?











Click it and Unblock the Notifications