Exit poll 2019: கொடுத்த தொகுதிகளில் முழு வெற்றி பெற்ற விசிக.. ஆனால் லோக்சபாவில் சிக்கலை சந்திக்குமே!
Recommended Video
சென்னை: எக்சிட் போல் முடிவுகளின்படி கொடுத்த தொகுதிகளில் முழு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் லோக்சபாவில் சிக்கலை சந்திக்கக் கூடும் என தெரிகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த முறை இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட்டனர்.
தேர்தலில் இவர்களுக்கு நட்சத்திரம் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதையடுத்து ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் திருமாவளவன் தேர்தல் ஆணையம் வழங்கிய பானை சின்னத்திலும் போட்டியிட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி
நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமையுடன் நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானது. இந்த கருத்துக் கணிப்புகளில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டியது
இந்த நிலையில் இது போல் கருத்து கணிப்புகளின் படி இவர்கள் இருவரும் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் பெரும் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தி்ல் போட்டியிட்ட ரவிக்குமார் திமுகவின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவனுக்கு அது போன்ற ஒரு நிர்பந்தம் கிடையாது. இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

5 இடங்களில்
மாநில கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டு பெற்ற 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடுமாம். அது போல் தமிழிசை வறுத்தெடுத்த மதிமுகவும் தனக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிடுமாம். ஆக இந்த கட்சிகள் இரண்டும் முழு வெற்றியை பெற்றுவிடும் என கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் தேசிய கட்சியான பாஜகவுக்கோ தமிழகத்தில் ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

பாஜக
விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியோரெல்லாம் போட்டியிட்ட தொகுதிகளில் முழு அளவு ஜெயிக்கும்போது தேசியக் கட்சி, தேசிய ஆளும் கட்சி ஒரு இடத்தில்தான் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதுவும் தமிழிசை வெற்றி பெற இயலாத நிலை. பொன் ராதாகிருஷ்ணனின் வெற்றியே கூட டவுட்டாக இருக்கிறது. காரணம், மக்கள் ஒட்டுமொத்த வெறுப்பில் உள்ளனர். இனியாவது தமிழக மக்களின் மனதைப் புரிந்து தமிழக பாஜக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications