இன்று முதல்.. ஏடிஎம் பயன்படுத்தினால் தனி கட்டணம் செலுத்தணுமா.. இணையத்தில் பரவும் தகவலால் பரபரப்பு
டிஎம் பயன்படுத்துவோர் அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் பரவி வருகிறது
சென்னை: இந்தியாவில் ஏடிஎம் பயன்படுத்துவோர் அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டுமாம்.. இப்படி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 வருடமாகவே உலகை ஆட்டி படைக்கும் கொரோனாவைரஸ் பரவலுக்கு தீர்வு இல்லை.. இது என்ன மாதிரியான வைரஸ் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.. மருந்தும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை..
அதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வைரஸின் அறிகுறிகளும் தெளிவாக, உறுதியாக சொல்லப்படவில்லை..

அறிகுறிகள்
ஒவ்வொரு நாளும் அறிகுறிகள் குறித்த புது புது தகவல்கள் வெளியாகி வருகிறது.. மற்றொரு பக்கம் அறிகுறியே இல்லாமலும் தொற்று சிலரை தாக்குவதாக சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், கொரோனாவைரஸ் சம்பந்தமான பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தனிக்கட்டணம்
அந்த வகையில், இந்தியாவில் ஏடிஎம் பயன்படுத்துவோர் அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவலும் பரபரத்து வருகிறது. இன்று முதல் அதாவது ஜுன் 1 முதல் ஏடிஎம்-களில் 4 முறைக்கும் மேல் பரிமாற்றம் செய்வோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.173 வசூலிக்கப்படும் என்றும் இதில் ரூ.150 வரி மற்றும் அதற்கான சேவை கட்டணம் ரூ.23 ஆகும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கலக்கம்
இதனால் பொதுமக்களிடையே ஒருவித கலக்கம் தொற்றி கொண்டது.. எனினும், சோஷியல் மீடியாவில் உலாவரும் இந்த பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த தகவலில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது... ஏடிஎம் பரிமாற்றங்களுக்கு வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகபட்சம் ரூ.20 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது..

வசூல்
இதைதவிர, சில தனியார் வங்கிகள் மட்டும் மாதத்திற்குள் 4 முறைக்கும் மேல் ஏடிஎம் பரிமாற்றங்களை செய்வோரிடம் இருந்து ரூ.150 வரை வசூலிக்கின்றன...மற்றபடி இந்த விதிமுறையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை... இந்த கட்டணமும் 3 பரிமாற்றங்களுக்கு பின்னரே வசூலிக்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications