தமிழக பதிவுத்துறை: நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 30% குபீர்னு உயர்வா? முதல்வரிடம் புகாருடன் போன பெயிரா
சென்னை: பதிவுத்துறையின் வருவாயை உயர்த்தும் நோக்கத்தில் நிலத்தின் சந்தை மதிப்பை விட கூடுதலாக 30 சதவிகிதம் மதிப்பு உயர்த்தி பதிவு செய்ய வேண்டும் என பதிவுக்கு வரும் பொது மக்களிடம் வலுக்கட்டாயமாக பதிவுத்துறை அதிகாரிகள், அழுத்தம் கொடுத்து பதிவு செய்ய வலியுறுத்துவதற்கு பெயிரா தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. இதுபோன்ற செயல்பாடுகளில் தேர்தல் காலங்களில் அரசுக்கு மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி தமிழக முதல்வருக்கு பெயிரா கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

நிலங்களுக்கான மதிப்பு
"தமிழகம் முழுவதும் நிலங்களுக்கான சர்வே எண் மற்றும் தெருவாரியாக வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை நிர்ணயித்து அதற்கான விவரங்களும் பதிவுத்துறையின் இணையதளமான (Tnreginet)-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபகாலமாகவே, தமிழகம் முழுவதும் பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவுத்துறையின் இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக மேலிடத்து வாய்மொழி உத்தரவு என்கின்ற பெயரில் 30% உயர்த்தி பதிவு செய்ய வலியுறுத்துவதாக மாநிலம் முழுவதிலிருந்து ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் FAIRA கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து எங்கள் கூட்டமைப்பினை அணுகி புகார் தெரிவித்து வருகின்றனர்.
30 சதவீதம் உயர்வா?
மேற்கண்ட வகையில் அடிப்படை காரணம் இன்றி 30% உயர்த்தி பதிவு செய்ய வலியுறுத்துவதன் காரணமாக வாங்குபவர்களின் சக்தி குறைவதுடன், வாங்குபவர்கள் அதிகப்படியான தங்களது கணக்கில் காட்டப்படும் பணத்திற்கு நிகராக சந்தை மதிப்பினை விட கூடுதலாக காண்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல் விற்பவர்களும் அவர்கள் விற்கக்கூடிய தொகைக்கு நிகராக மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றார்கள்.
மேலும் தற்பொழுது பதிவுத்துறைக்கு செலுத்தப்படுகின்ற முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்திற்கு கூடுதலாக 30% செலுத்த நேரிடும். இப்படி பதிவுத்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு என்கின்ற பெயரில் பதிவு அலுவலகங்களுக்கு சேவை பெறவேண்டி வரும் பொதுமக்களுக்கு இடையூறும், மிகப்பெரிய அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். இச்செயலானது ஜனநாயகத்திற்கு எதிரானதாகவும், பொதுமக்கள் நலனிற்கு எதிராக தொடுக்கப்பட்ட அப்பட்டமான அதிகார துஷ்பிரயோக செயலாகும்.
இப்படி வாய்மொழி உத்தரவு என்கின்ற சந்தை மதிப்பை விட கூடுதலாக 30% செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்கின்ற தமிழக அரசின் அரசாணை மற்றும் சுற்றறிக்கை என எவ்வித முறையான வழிகாட்டுதலும் இன்றி பதிவுத்துறை அதிகாரிகளின் தான் தோன்றித்தனமான செயல்பாடுகளினால் பலரின் இல்லக் கனவுகள் நினைவாகாமல், கனவாகவே கலையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது..
ரியல் எஸ்டேட் துறை
இதனால் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் சொத்துக்களை விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்படும் பெரும் அபாயம் ஏற்படுவதன் காரணமாக பொருளாதார இழப்புக்கு உள்ளாகும் ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
தாங்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலன் வேண்டி பதிவுத்துறையில் பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருவது பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசுக்கும், தங்களுக்கும் நற்பெயரினை பெற்று தந்திருக்கிறது.
தமிழக பதிவுத்துறை
இந்த சூழலில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி தங்களின் நல்லாட்சிக்கும், நற்பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பதிவுத்துறை அதிகாரிகள் என்கின்ற போர்வையில் சில விஷக்கிருமிகள் செயல்பட்டு வருவதன் காரணமாக, பதிவுத்துறை தனது நற்பெயரை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன் தமிழ்நாடு அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது..
இத்தகைய பதிவுத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், ரியல் எஸ்டேட் துறையும் அதலபாதாளத்திற்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஆகவே மேற்கண்ட பிரச்சினைகளை தங்களின் மேலான கவனத்தில் கொண்டு, இப்பிரச்சினையை களைவதற்கான உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, பதிவுத்துறையின் இணையதளத்தில் நிர்ணயித்திருக்கின்ற வழிகாட்டி மதிப்பிற்கு நிகராக பொதுமக்கள் பதிவு செய்யும் வண்ணம் வழிவகை செய்து, பதிவுத்துறை இதனை ஆமோதித்து பதிவு செய்வதை உறுதி செய்ய தாங்கள் வழிவகை செய்ய வேண்டும்" என்று அந்த கடிதத்தில் டாக்டர் ஹென்றி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications