தமிழக பதிவுத்துறை: நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 30% குபீர்னு உயர்வா? முதல்வரிடம் புகாருடன் போன பெயிரா
சென்னை: பதிவுத்துறையின் வருவாயை உயர்த்தும் நோக்கத்தில் நிலத்தின் சந்தை மதிப்பை விட கூடுதலாக 30 சதவிகிதம் மதிப்பு உயர்த்தி பதிவு செய்ய வேண்டும் என பதிவுக்கு வரும் பொது மக்களிடம் வலுக்கட்டாயமாக பதிவுத்துறை அதிகாரிகள், அழுத்தம் கொடுத்து பதிவு செய்ய வலியுறுத்துவதற்கு பெயிரா தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. இதுபோன்ற செயல்பாடுகளில் தேர்தல் காலங்களில் அரசுக்கு மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி தமிழக முதல்வருக்கு பெயிரா கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

நிலங்களுக்கான மதிப்பு
"தமிழகம் முழுவதும் நிலங்களுக்கான சர்வே எண் மற்றும் தெருவாரியாக வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை நிர்ணயித்து அதற்கான விவரங்களும் பதிவுத்துறையின் இணையதளமான (Tnreginet)-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபகாலமாகவே, தமிழகம் முழுவதும் பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவுத்துறையின் இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக மேலிடத்து வாய்மொழி உத்தரவு என்கின்ற பெயரில் 30% உயர்த்தி பதிவு செய்ய வலியுறுத்துவதாக மாநிலம் முழுவதிலிருந்து ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் FAIRA கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து எங்கள் கூட்டமைப்பினை அணுகி புகார் தெரிவித்து வருகின்றனர்.
30 சதவீதம் உயர்வா?
மேற்கண்ட வகையில் அடிப்படை காரணம் இன்றி 30% உயர்த்தி பதிவு செய்ய வலியுறுத்துவதன் காரணமாக வாங்குபவர்களின் சக்தி குறைவதுடன், வாங்குபவர்கள் அதிகப்படியான தங்களது கணக்கில் காட்டப்படும் பணத்திற்கு நிகராக சந்தை மதிப்பினை விட கூடுதலாக காண்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல் விற்பவர்களும் அவர்கள் விற்கக்கூடிய தொகைக்கு நிகராக மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றார்கள்.
மேலும் தற்பொழுது பதிவுத்துறைக்கு செலுத்தப்படுகின்ற முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்திற்கு கூடுதலாக 30% செலுத்த நேரிடும். இப்படி பதிவுத்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு என்கின்ற பெயரில் பதிவு அலுவலகங்களுக்கு சேவை பெறவேண்டி வரும் பொதுமக்களுக்கு இடையூறும், மிகப்பெரிய அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். இச்செயலானது ஜனநாயகத்திற்கு எதிரானதாகவும், பொதுமக்கள் நலனிற்கு எதிராக தொடுக்கப்பட்ட அப்பட்டமான அதிகார துஷ்பிரயோக செயலாகும்.
இப்படி வாய்மொழி உத்தரவு என்கின்ற சந்தை மதிப்பை விட கூடுதலாக 30% செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்கின்ற தமிழக அரசின் அரசாணை மற்றும் சுற்றறிக்கை என எவ்வித முறையான வழிகாட்டுதலும் இன்றி பதிவுத்துறை அதிகாரிகளின் தான் தோன்றித்தனமான செயல்பாடுகளினால் பலரின் இல்லக் கனவுகள் நினைவாகாமல், கனவாகவே கலையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது..
ரியல் எஸ்டேட் துறை
இதனால் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் சொத்துக்களை விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்படும் பெரும் அபாயம் ஏற்படுவதன் காரணமாக பொருளாதார இழப்புக்கு உள்ளாகும் ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
தாங்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலன் வேண்டி பதிவுத்துறையில் பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருவது பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசுக்கும், தங்களுக்கும் நற்பெயரினை பெற்று தந்திருக்கிறது.
தமிழக பதிவுத்துறை
இந்த சூழலில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி தங்களின் நல்லாட்சிக்கும், நற்பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பதிவுத்துறை அதிகாரிகள் என்கின்ற போர்வையில் சில விஷக்கிருமிகள் செயல்பட்டு வருவதன் காரணமாக, பதிவுத்துறை தனது நற்பெயரை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன் தமிழ்நாடு அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது..
இத்தகைய பதிவுத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், ரியல் எஸ்டேட் துறையும் அதலபாதாளத்திற்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஆகவே மேற்கண்ட பிரச்சினைகளை தங்களின் மேலான கவனத்தில் கொண்டு, இப்பிரச்சினையை களைவதற்கான உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, பதிவுத்துறையின் இணையதளத்தில் நிர்ணயித்திருக்கின்ற வழிகாட்டி மதிப்பிற்கு நிகராக பொதுமக்கள் பதிவு செய்யும் வண்ணம் வழிவகை செய்து, பதிவுத்துறை இதனை ஆமோதித்து பதிவு செய்வதை உறுதி செய்ய தாங்கள் வழிவகை செய்ய வேண்டும்" என்று அந்த கடிதத்தில் டாக்டர் ஹென்றி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications