"பரிசுப் பெட்டி"க்காக அகமகிழும் அமமுக.. ஆஹா இது "அம்மா"வின் ஆசிர்வாதமேதான்.. விஷயம் இருக்கு!
Recommended Video

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டி வழங்கும் திட்டத்தை கடைசியாக தொடங்கி வைத்தார். அந்த பரிசுப் பெட்டியே தினகரனின் கட்சிக்கு முதல் பொதுசின்னமாக கிடைத்துள்ளது.
2011ம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் ஏறிய அதிமுக மீண்டும் தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றதுக்கு காரணம் ஜெயலலிதா அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் தான்.
மீண்டும் 2016ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பும் மக்கள் நலத்திட்டங்களை முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடர்ந்தார். அவர் உயிருடன் இருக்கும் போது கடைசியாக தொடங்கி வைத்த திட்டம் எது தெரியுமா?

ஜெயலலிதா
2016ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். எனவே அவர் பொதுமக்களுக்கு கடைசியாக வழங்கியது பரிசுப் பெட்டிதான்.

சட்டப்போராட்டம்
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், தான் தான் உண்மையான அதிமுக என அதனை கேட்டு போராடினார். ஆனால் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் கைவிரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன் தான் ஆர்கே நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தையாவது கொடுக்கும் படி கேட்டார். ஆனால் அதற்கும் முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்துவிட்டது.

உச்ச நீதிமன்றம்
மக்களவை தேர்தல் வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாள் என்ற நிலையில், சட்டப்போராட்டம் மூலம் தனது அமமுக கட்சிக்கு குக்கருக்கு பதில் பொதுசின்னத்தை தினகரன் பெற்றார். உச்சநீதிமன்றம் உத்தரவை ஏற்று தேர்தல் ஆணையம் தினகரன் அணிக்கு பொதுசின்னம் அளிக்க ஒப்புக்கொண்டது.

கிப்ட் பாக்ஸ்
இதையடுத்து தினகரனிடம் 36 சின்னங்களை காண்பித்து இதில் எது வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டது. அதற்கு அவர் பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்வு செய்தார். இதையடுத்து பரிசுப் பெட்டி சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா-தினகரன்
ஜெயலலிதா கடைசியாக பொதுமக்களுக்கு வழங்கிய நலத்திட்டம் தான் பரிசுப்பெட்டி. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கினார். இப்போது அதுதான் தினகரனின் அரசியல் வாழ்க்கைக்கு ஆரம்பம் ஆகியுள்ளது. பரிசுப்பெட்டியோடு களம் இறங்கும் தினகரன், ஏற்கனவே ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்கே நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications