”கொடியிலே மல்லிகைப்பூ” மறக்க முடியுமா? ஏழைகளின் ஜேசுதாஸ்.. ஜெயச்சந்திரன் பற்றி வைரமுத்து உருக்கம்
சென்னை: 'கொடியிலே மல்லிகைப்பூ' மறக்க முடியுமா?... 'தெய்வம் தந்த பூவே' காற்றில் கரையுமா?.. 'என்மேல்விழுந்த மழைத்துளியே' மண்ணில் மறைந்துபோகுமா? என்று மறைந்த புகழ்மிக்க பாடகர் ஜெயச்சந்திரனுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயச்சந்திரனை ஏழைகளின் ஜேசுதாஸ் என்று அழைப்பேன் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர் பாடகர் ஜெயச்சந்திரன். தமிழ், மலையாளம் என பல மொழிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். 80 வயதான ஜெயச்சந்திரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவினால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கேரளாவில் பிறந்தவர் என்றாலும், தமிழிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் ஜெயச்சந்திரன். இவரது குரலுக்கு மயங்காத இதயங்கள் இல்லை என்று சொல்லலாம். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது.. என்ற பாடலை பாடி தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சை கவர்ந்தவர் ஜெயச்சந்திரன்.
இதேபோன்று அப்போது இளைய தளபதியாக இருந்த தவெக தலைவர் விஜய்க்கு ஹிட் கொடுத்த படமான பூவே உனக்காக படத்தில் சொல்லாமலே யார் பார்த்தது.. என்ற பல பாடலை ஜெயச்சந்திரன் தான் பாடினார். ஜெயச்சந்திரன் மறைவுக்கு திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கவிஞர் வைரமுத்துவும் ஜெயச்சந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பாடகர் ஜெயச்சந்திரன்
காலமானார் என்ற செய்தியால்
கண்கள் நீர்கட்டின
'கொடியிலே மல்லிகைப்பூ'
மறக்க முடியுமா?
'தெய்வம் தந்த பூவே'
காற்றில் கரையுமா?
'என்மேல்விழுந்த
மழைத்துளியே'
மண்ணில் மறைந்துபோகுமா?
எத்துணை எத்துணை பாடல்கள்
அத்துணையும் முத்துக்கள்
பழக இனியவர்;
பண்பாளர்
அவரை நான்
ஏழைகளின் ஜேசுதாஸ்
என்பேன்

அவர்
உடல் மறைந்தாலும்
குரல் மறையாது
'இன்று எழுதிய என்கவியே
இனிமேல் உன்னை
எவர் இசைப்பார்'
கனத்த மனத்தோடு
அஞ்சலியும்
ஆழ்ந்த இரங்கலும்... என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications