விவசாய கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் மறியல் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை
சென்னை: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு எச்சரித்துள்ளார்.
மணப்பாறை அருகே பூலாம்பட்டியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றன்னர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை வையம்பட்டி வழியாக கொண்டுவர கோரியும், வெள்ளம் வரும் காலங்களில் பஞ்சப்பட்டி ஏரி, பொன்னணியாறு டேம், கண்ணூத்து டேம்களை நிரப்பக்கோரியும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்யவேண்டும். வங்கிகளில் உள்ள விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், 2016-17ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், கடுமையான வறட்சியை தமிழகம் கண்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரிய நடவடிக்கை எடுத்து விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும். இல்லையென்றால் அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் பிரமாண்ட மறியல் போராட்டம் நடத்தப்படும்.
வைகை, குண்டாறுகளை இணைத்து பஞ்சப்பட்டி ஏரி, பொன்னணியாறு, கண்ணூத்து போன்ற டேம்கள் மூலமாக மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications