விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ்.. பயிர் கடனுக்கு பழைய நடைமுறையை பின்பற்றப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பழைய நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும். இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும், கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய நடைமுறையின்படி சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பழைய நடைமுறையை பின்பற்ற தற்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் தொடர்புடைய இதர பணிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இதர பணிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இருப்பினும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி, பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்குவதில் இடர்பாடுகள் இருப்பதாக சில மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்குவதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளையே நடப்பு ஆண்டிலும் பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications