ஷாக்கடிக்கும் கட்டண உயர்வு! சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் குற்றச்சாட்டு.. மழுப்பும் நிர்வாகம்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புக்கான ஆராய்ச்சிக் கட்டணம் ரூ.100லிருந்து ரூ.25,000ஆக உயர்ந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுமார் 166 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சாமானிய மக்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் மற்றும் ஏபிஜே அப்துல்கலாம் என 6 குடியரசுத் தலைவர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. ஏராளமான அரசு அதிகாரிகளையும் இந்த பல்கலை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில், 1.85 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

ஆனால் சமீப நாட்களாக இந்த பல்கலையின் நடவடிக்கைகள், அதன் இலக்கின் தடத்திலிருந்து விலகி நடக்கிறதோ? என்கிற கேள்வியை உருவாக்கியுள்ளது. அதாவது இந்த பல்கலையில் பயிலும் முனைவர் பட்டப் படிப்புக்கான ஆராய்ச்சி கட்டணம் ரூ.100லிருந்து ரூ.25,000ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
கட்டண உயர்வை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் அமல்படுத்தியிருப்பதாக ஆராய்ச்சி மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முழு நேரம் பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க முன்பு கட்டணம் ரூ.1,500ஆக இருந்தது. அவை தற்போது ரூ.25,000 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பகுதி நேரம் பிஎச்டி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.3,500ஆக இருந்தது தற்போது ரூ.35,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க தற்போது கூடுதலாக ரூ.25,000 செலுத்த வேண்டியுள்ளது என்று மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுவரை ஆராய்ச்சிக் கட்டுரைகளை திருத்துவதற்கு வெளிநாட்டிற்கு அனுப்பியதில்லை என்றும் தற்போது வெளிநாட்டுக்கு அனுப்புவதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பை மாற்ற முன்பு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் நடைபெற்ற சிண்டி கேட் மற்றும் செனட் கூட்டத்தில் இதற்கான முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி மறுத்திருக்கிறார். கட்டண உயர்வு குறித்து பரிசீலித்துதான் வருகிறோம். இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இந்த பல்கலையில் நிதி நெருக்கடி இருக்கிறது. எனவே இதனை சமாளிக்கதான் இது போன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எப்படி இருந்தாலும் கல்வி என்பது சேவையாகதானே இருக்க முடியும்? என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications