கங்கனா கன்னத்தில் பளார்.. பெண் காவலர் கையில் இனி பெரியார்.. தங்க மோதிரம் அணிவிப்பதாக அறிவிப்பு..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகையும் தற்போதைய தேர்தலில் வென்று எம்பி ஆன கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசளிப்பதாக தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சுமார் 290 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்கவும் இருக்கிறார்.

Kangana Ranaut BJP TPDK

இந்த தேர்தலில் முதன்முறையாக நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதை அடுத்து சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கங்கனா ரனாவத் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

கங்கனா ரனாவத் : இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மண்டி தொகுதியின் எம்பியும் நடிகையுமான கங்கனா சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தார்.

பெண் காவலர்: பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு நிலையத்திற்குள் செல்ல முயன்ற நடிகை கங்கனா ரனாவத்துக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரியான குல்விந்தர் கவுருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது அந்த அதிகாரி கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இதில் கங்கனா ரனாவத்துக்கு கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Kangana Ranaut BJP TPDK

கன்னத்தில் அடி: அப்போது நடிகை கங்கனா விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. தனது தாயும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் தனது தாயை தீவிரவாதி என சித்தரித்த கங்கனா ரனாவத்தை தான் அடித்ததாக அந்த பெண் காவலர் கூறி இருந்தார். இதனையடுத்து அங்கிருந்த மற்ற அதிகாரிகள் கங்கனாவை பாதுகாப்பாக அனுப்பி வைத்த நிலையில் , பெண் அதிகாரியை சக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

ஆதரவு: இது தொடர்பான விசாரணையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த பெண் காவலருக்கு நாடு முழுவதும் ஆதரவு கிளம்பி வருகிறது. பல விவசாய சங்கங்களும் அமைப்புகளும் பெண் காவலருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவருக்கு பரிசு தொகையுடன் வேலையும் வழங்க தயாராக இருப்பதாக பலர் அறிவித்து வருகின்றனர்.

Kangana Ranaut BJP TPDK

தபெதிக: இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசளிப்பதாக தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பஞ்சாபில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், இழிவாகவும் சித்தரித்து பேசிய பாஜ எம்பி கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்தார்.

தங்க மோதிரம்: அவரது தாய் விவசாயிகள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர். தன் தாயையும் தீவிரவாதி என்று சொன்னார் என்பதால் அறைந்தேன் என்று குல்விந்தர் கவுர் கூறியிருக்கிறார். விவசாயிகளின் உரிமைக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் போராடியவர் இந்த காவலரின் தாயார். விவசாயிகள் பக்கம் நின்று தனி ஒரு வீராங்கனையாக துணிவோடு எதிர்வினை ஆற்றிய வீரமங்கை குல்விந்தர் கௌரை பாராட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் அனுப்பி வைக்கிறோம்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+