கங்கனா கன்னத்தில் பளார்.. பெண் காவலர் கையில் இனி பெரியார்.. தங்க மோதிரம் அணிவிப்பதாக அறிவிப்பு..!
சென்னை: விவசாயிகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகையும் தற்போதைய தேர்தலில் வென்று எம்பி ஆன கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசளிப்பதாக தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சுமார் 290 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்கவும் இருக்கிறார்.

இந்த தேர்தலில் முதன்முறையாக நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதை அடுத்து சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கங்கனா ரனாவத் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
கங்கனா ரனாவத் : இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மண்டி தொகுதியின் எம்பியும் நடிகையுமான கங்கனா சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தார்.
பெண் காவலர்: பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு நிலையத்திற்குள் செல்ல முயன்ற நடிகை கங்கனா ரனாவத்துக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரியான குல்விந்தர் கவுருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது அந்த அதிகாரி கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இதில் கங்கனா ரனாவத்துக்கு கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கன்னத்தில் அடி: அப்போது நடிகை கங்கனா விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. தனது தாயும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் தனது தாயை தீவிரவாதி என சித்தரித்த கங்கனா ரனாவத்தை தான் அடித்ததாக அந்த பெண் காவலர் கூறி இருந்தார். இதனையடுத்து அங்கிருந்த மற்ற அதிகாரிகள் கங்கனாவை பாதுகாப்பாக அனுப்பி வைத்த நிலையில் , பெண் அதிகாரியை சக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
ஆதரவு: இது தொடர்பான விசாரணையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த பெண் காவலருக்கு நாடு முழுவதும் ஆதரவு கிளம்பி வருகிறது. பல விவசாய சங்கங்களும் அமைப்புகளும் பெண் காவலருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவருக்கு பரிசு தொகையுடன் வேலையும் வழங்க தயாராக இருப்பதாக பலர் அறிவித்து வருகின்றனர்.

தபெதிக: இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசளிப்பதாக தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பஞ்சாபில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், இழிவாகவும் சித்தரித்து பேசிய பாஜ எம்பி கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்தார்.
தங்க மோதிரம்: அவரது தாய் விவசாயிகள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர். தன் தாயையும் தீவிரவாதி என்று சொன்னார் என்பதால் அறைந்தேன் என்று குல்விந்தர் கவுர் கூறியிருக்கிறார். விவசாயிகளின் உரிமைக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் போராடியவர் இந்த காவலரின் தாயார். விவசாயிகள் பக்கம் நின்று தனி ஒரு வீராங்கனையாக துணிவோடு எதிர்வினை ஆற்றிய வீரமங்கை குல்விந்தர் கௌரை பாராட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் அனுப்பி வைக்கிறோம்." என கூறியுள்ளார்.
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications