இறுதி செமஸ்டர் & இறுதி செமஸ்டர் அரியர் தேர்வுகள்.. செப். 22ல் தொடங்கும்.. அண்ணா பல்கலை. அறிவிப்பு!
சென்னை: பொறியியல் படிப்புகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் மற்றும் இறுதி செமஸ்டருக்கான அரியர் தேர்வுகள் வரும் செப். 22ம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் கொண்டு வரப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.

கொரோனா காரணமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த வேண்டியது இல்லை. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் இவர்களை பாஸ் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை யுஜிசி கடுமையாக எதிர்த்தது.
அதோடு கண்டிப்பாக இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என்று பல்கலைக்கழக கல்வி மானியக் குழுவான யுஜிசி அறிவித்தது. இதனால் தமிழகத்தில் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள், அரியர் தேர்வுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் பொறியியல் படிப்புகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் மற்றும் இறுதி செமஸ்டருக்கான அரியர் தேர்வுகள் வரும் செப். 22ம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதுவரை தேர்வு எழுத விண்ணப்பிக்கவில்லை என்றால் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
செய்முறைத் தேர்வுகள் 22-ம் தேதி நடக்கும். எழுத்துத் தேர்வுகள் 24 முதல் நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications