கொடிகம்ப பைப் அகற்றிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.. சாதிய ரீதியாக திட்டிய பாஜக மாஜி நிர்வாகி - வழக்கு
சென்னை: சென்னையில் பாஜக கொடிக்கம்பத்துக்காக வைத்திருந்த குழாயை அகற்றியதாக தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை சாதிய ரீதியாக திட்டிய முன்னாள் பாஜக நிர்வாகி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சென்னை பனையூர் வீட்டின் அருகே 55 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் அமைக்க அந்த கட்சியினர் முயன்றனர். ஆனால் முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து அந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஜேசிபியின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி முதல் 100 நாட்கள் ஒவ்வொரு நாளும் 100 கொடிக்கம்பங்கள் அமைக்கப்படும் என அண்ணாமலை அறிவித்தார். கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணிகளை பாஜகவினர் அனைத்து இடங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் சில இடங்களில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாக பாஜகவினர் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் பாஜக கொடிக்கம்பம் நடுவதற்கு வைக்கப்பட்டு இருந்த குழாயை அகற்றியதாக கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை பாஜக முன்னாள் நிர்வாகி சாதிய ரீதியாக திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை கேகேநகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயராமன் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாஜகவின் முன்னாள் நிர்வாகி ஆவார்.

இந்நிலையில் ராமலிங்கம் புதிதாக பாஜக கொடிக்கம்பம் அமைக்கும் வகையில் குழாய்களை தயார் நிலையில் வைத்துள்ளார். இதனை ஜெயராமன் அகற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ராமலிங்கம் சாதிய ரீதியாக ஜெயராமனை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கேகே நகர் போலீசில் ஜெயராமன் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ராமலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications