Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடிகம்ப பைப் அகற்றிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.. சாதிய ரீதியாக திட்டிய பாஜக மாஜி நிர்வாகி - வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பாஜக கொடிக்கம்பத்துக்காக வைத்திருந்த குழாயை அகற்றியதாக தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை சாதிய ரீதியாக திட்டிய முன்னாள் பாஜக நிர்வாகி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சென்னை பனையூர் வீட்டின் அருகே 55 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் அமைக்க அந்த கட்சியினர் முயன்றனர். ஆனால் முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து அந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.

 FIR filed against ex-BJP executive for casting caste abuse at retired government employee in Chennai

இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஜேசிபியின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி முதல் 100 நாட்கள் ஒவ்வொரு நாளும் 100 கொடிக்கம்பங்கள் அமைக்கப்படும் என அண்ணாமலை அறிவித்தார். கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணிகளை பாஜகவினர் அனைத்து இடங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் சில இடங்களில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாக பாஜகவினர் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் சென்னையில் பாஜக கொடிக்கம்பம் நடுவதற்கு வைக்கப்பட்டு இருந்த குழாயை அகற்றியதாக கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை பாஜக முன்னாள் நிர்வாகி சாதிய ரீதியாக திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை கேகேநகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயராமன் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாஜகவின் முன்னாள் நிர்வாகி ஆவார்.

 FIR filed against ex-BJP executive for casting caste abuse at retired government employee in Chennai

இந்நிலையில் ராமலிங்கம் புதிதாக பாஜக கொடிக்கம்பம் அமைக்கும் வகையில் குழாய்களை தயார் நிலையில் வைத்துள்ளார். இதனை ஜெயராமன் அகற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ராமலிங்கம் சாதிய ரீதியாக ஜெயராமனை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கேகே நகர் போலீசில் ஜெயராமன் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ராமலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+