ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. வெளியானது முதல் தகவல் அறிக்கை.. பகீர்
சென்னை: ஆளுநர் மாளிகை பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியானது. இந்த வழக்கை கிண்டி போலீஸார் விசாரணை செய்து வருகிறார்ரகள்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் அருகே நேற்று பகல் ரவுடி ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசினார். அப்போது அவர் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற போது அவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையடுத்து விசாரணையில் அவர் கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் தேர்வை எதிர்த்து தான் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டை வீசியதாகவும் சிறையில் நீண்டகாலமாக இருந்து வருவோரை விடுதலை செய்ய ஆளுநர் மறுப்பதாகவும் அதனால் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த கருக்கா வினோத் ஏற்கெனவே பிப்ரவரி மாதம் தமிழக பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் பெட்ரோல் குண்டை வீசியவர். இவர் சரித்திர குற்றவாளி என போலீஸார் தெரிவித்துள்ளனர். அதாவது இவரது பெயர் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளது. இவர் ஏற்கெனவே தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீதும் தேனாம்பேட்டை டாஸ்மாக் கடை மீதும் குண்டு வெடி வீசிய வழக்குகள் உள்ளன என விசாரணையில் தெரியவந்தது.
இவர் பிப்ரவரி மாதம் பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசியதை அடுத்து கடந்த 21 ஆம் தேதி புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. உச்சகட்ட பாதுகாப்பு மையமாக இருக்கும் ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் உளவுத் துறை தனது பணிகளை சரியாக செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன. இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை அடுத்த கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமைக் காவலர் மோகன் என்பவர் கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜ்பவனின் பிரதான நுழைவாயிலை நோக்கி வினோத் வீசிய வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது.
இதையடுத்து வினோத்தை பிடிக்க முயன்ற போது காவலர்கள் மீதும் இரண்டாவது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதையும் மீறி வினோத்தை சுற்றி வளைத்த போது காவலர்களை அவர் மிரட்டினார். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 124 சட்டப்பிரிவை கூடுதலாக சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications