Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. வெளியானது முதல் தகவல் அறிக்கை.. பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் மாளிகை பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியானது. இந்த வழக்கை கிண்டி போலீஸார் விசாரணை செய்து வருகிறார்ரகள்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் அருகே நேற்று பகல் ரவுடி ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசினார். அப்போது அவர் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற போது அவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

FIR released in the case of petrol bomb hurled at Tamilnadu Rajbhavan

இதையடுத்து விசாரணையில் அவர் கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் தேர்வை எதிர்த்து தான் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டை வீசியதாகவும் சிறையில் நீண்டகாலமாக இருந்து வருவோரை விடுதலை செய்ய ஆளுநர் மறுப்பதாகவும் அதனால் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த கருக்கா வினோத் ஏற்கெனவே பிப்ரவரி மாதம் தமிழக பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் பெட்ரோல் குண்டை வீசியவர். இவர் சரித்திர குற்றவாளி என போலீஸார் தெரிவித்துள்ளனர். அதாவது இவரது பெயர் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளது. இவர் ஏற்கெனவே தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீதும் தேனாம்பேட்டை டாஸ்மாக் கடை மீதும் குண்டு வெடி வீசிய வழக்குகள் உள்ளன என விசாரணையில் தெரியவந்தது.

இவர் பிப்ரவரி மாதம் பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசியதை அடுத்து கடந்த 21 ஆம் தேதி புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. உச்சகட்ட பாதுகாப்பு மையமாக இருக்கும் ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் உளவுத் துறை தனது பணிகளை சரியாக செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன. இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை அடுத்த கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமைக் காவலர் மோகன் என்பவர் கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜ்பவனின் பிரதான நுழைவாயிலை நோக்கி வினோத் வீசிய வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது.

இதையடுத்து வினோத்தை பிடிக்க முயன்ற போது காவலர்கள் மீதும் இரண்டாவது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதையும் மீறி வினோத்தை சுற்றி வளைத்த போது காவலர்களை அவர் மிரட்டினார். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 124 சட்டப்பிரிவை கூடுதலாக சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+