பரபரத்த சென்னை.. பெரும் தீ! கருகிய 2 பஸ்கள், 2 ஆட்டோ, லாரி, வேன் -தலைநகரை உலுக்கிய கேகே நகர் சம்பவம்
சென்னை: கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய வாகனங்கள் தீயில் கருகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்டு, ஆர்டிஓ அலுவலக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அங்கு ஏராளமான பேருந்துகள், லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

உரிமையாளர்களால் மீட்கப்படாமல் அங்கு ஏராளமான வாகனங்கள் பழுதாகி புழுதி படர்ந்து காணப்படும். இந்த நிலையில் இன்று மாலை அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிதாக ஏற்பட்ட இந்த தீ, மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் பரவியது கொழுந்துவிட்டு எரிந்தது.
கரும்புகையுடன் கூடிய தீயை கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சென்னை தியாகராயர் நகர், கிண்டி, கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். வாகனங்களில் வேகமாக எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பறிமுதல் செய்யப்பட்ட 2 பேருந்துகள், 2 ஆட்டோக்கள், 1 லாரி, 1 வேன் ஆகிய வாகனங்கள் முழுவதுமாக தீயில் கருகி நாசமாகின. வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த காரணத்தால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டது. இது தொடர்பாக சென்னை கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications