குபு குபுன்னு எரிந்த தீ.. சென்னையின் முக்கிய ஏரியாவாச்சே! மொத்தமாக கருகிய 2 மாடி ஜவுளிக்கடை
சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள ஜவுளிக் கடையில் இன்று அதிகாலை மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடை ஒன்றில் அதிகாலை மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தொடக்கத்தில் கடையில் இருந்து புகை வெளியேறிய நிலையில், படிப்படியாக தீ பரவத் தொடங்கியது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்த 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் தீயணை கட்டுப்படுத்தும் பணி கடினமாக இருந்து வருகிறது. கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி தருகிறது. தண்ணீர் காலியாகியும் தீ அணைக்கப்பட்டதால் தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வர வழைக்கப்பட்டு அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2 மாடிகளை கொண்ட இந்த ஜவுளிக் கடையில் பரவிய தீயை அணைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் கடையின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டது. 2 மாடிகளிலும் தீ பற்றி எரிந்ததால் கடையில் இருந்த ஆடைகள், இதர பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications