சென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்
சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள பிராட்வே பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகமான சரவணபவனில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சரவணபவன் உணவகத்தில் எரியும் தீயை அணைத்து கட்டுப்படுத்தும் முயற்சியில், எஸ்பிளனேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1981-ம் ஆண்டு ஓட்டல் சரவண பவன் துவங்கப்பட்டது. தென்னிந்திய சைவ உணவு வகைகளை தனிச்சுவையுடன் வழங்கும் ஓர் தொடர் உணவக நிறுவனமாக தற்போது திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த உணவகத்தின் கிளைகள் உள்ளன.
அமெரிக்கா, கனடா,லண்டன், பாரிஸ், சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு என உலகெங்கும் வெளிநாட்டு விற்பனை உரிமை கிளைகளையும் சரவணபவன் கொண்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரிமுனை என்றழைக்கப்படும் சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள ஓட்டல் சரவணபவனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டடுள்ளனர்.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதுவரை காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications