Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள பிராட்வே பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகமான சரவணபவனில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சரவணபவன் உணவகத்தில் எரியும் தீயை அணைத்து கட்டுப்படுத்தும் முயற்சியில், எஸ்பிளனேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Fire breaks out at Saravana Bhavan restaurant in Chennai

கடந்த 1981-ம் ஆண்டு ஓட்டல் சரவண பவன் துவங்கப்பட்டது. தென்னிந்திய சைவ உணவு வகைகளை தனிச்சுவையுடன் வழங்கும் ஓர் தொடர் உணவக நிறுவனமாக தற்போது திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த உணவகத்தின் கிளைகள் உள்ளன.

அமெரிக்கா, கனடா,லண்டன், பாரிஸ், சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு என உலகெங்கும் வெளிநாட்டு விற்பனை உரிமை கிளைகளையும் சரவணபவன் கொண்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரிமுனை என்றழைக்கப்படும் சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள ஓட்டல் சரவணபவனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டடுள்ளனர்.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதுவரை காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+