தண்ணீர் பஞ்சத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது.. சென்னையில் தீயை அணைக்க நீர் இல்லாமல் தவித்த வீரர்கள்
Recommended Video
சென்னை: சென்னையில் தீயை அணைக்க கூட தண்ணீர் இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பருவமழை பலனளிக்காததால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் தலைத் தூக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் சென்னையை பற்றி கேட்கவே வேண்டாம்.
கடும் வெப்பத்தாலும் பருவமழை பொய்த்துவிட்டதாலும் சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்டவை வறண்டுவிட்டன.

தீவிபத்து
இதனால் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் பஞ்சம் அதிகளவில் காணப்படுகிறது. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் பொதுமக்கள் தண்ணீருக்காக பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் மேடவாக்கத்தில் உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

தண்ணீர் இல்லை
இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். எனினும் தீயணைப்பு துறையினர் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் கொடுத்தால் வருவதாக தெரிவித்தனர்.

தீயணைப்பு
இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்து பணியாளர்கள் அருகில் உள்ள சித்தேரியிலிருந்து நீர் கொண்டு வந்தனர். அத்துடன் தீயையும் பஞ்சாயத்து பணியாளர்களே எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தண்ணீரை அணைத்து வைத்தனர்.

தண்ணீர் கேட்ட வீரர்கள்
இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பொதுமக்கள் கூறுகையில் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்களோ தீயை அணைக்க தண்ணீர் கொடுக்குமாறு கேட்டனர். இதையடுத்து சித்தேரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தோம். எனினும் குறிப்பிட்ட நேரத்துக்கு வீரர்கள் வரவில்லை என்றனர்.

தேவையான உபகரணங்கள்
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் எங்களது அனைத்து வாகனங்களிலும் தேவையான தண்ணீர் உள்ளது. பெரிய தீவிபத்து ஏற்பட்டால் நாங்கள் மெட்ரோ வாரியத்திடமிருந்து தண்ணீர் கேட்போம். அது மட்டுமல்லாது எங்களுடைய வாகனத்தில் அருகிலிருக்கும் ஏரி அல்லது குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு தேவையான உபகரணங்கள் உள்ளன.

தவறான தகவல்
இந்தச் சம்பவம் தகவல் பரிமாற்ற பிரச்சினை காரணமாக நடந்திருக்கலாம். மேடவாக்கத்தில் தீவிபத்து நடந்த அதே நேரத்தில் பீர்க்கங்கரணையிலும் தீவிபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு கட்டுப்பாட்டு துறையினர் தண்ணீர் தேவை என தவறாக தெரிவித்திருப்பர் என்றார் அந்த அதிகாரி.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications