ஊரக உள்ளாட்சி தேர்தல்- முதல் கட்ட வாக்குப் பதிவு நிறைவு- 60%க்கும் அதிகமான வாக்குகள் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று காலை முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 60%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.
பகல் 1 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்:
நாமக்கல் - 50%; ராமநாதபுரம் - 43.01%; நாகை - 41.63%; தர்மபுரி - 35.91%; கடலூர் - 40.36%; திருவாரூர் - 48.71%; மதுரை - 46%; திண்டுக்கல் - 43.24%; கரூர் - 50.02%; கோவை - 38.29%; திருப்பூர் - 41.36%; திருச்சி - 49.20%; திருவண்ணாமலை - 36.90%; பெரம்பலூர் - 44.43%; அரியலூர் - 34.21%; புதுக்கோட்டை - 48%; தூத்துக்குடி - 42.39%;
சேலம் சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குப் பதிவு
ஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தலையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சேலம் மாவட்டம், நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். #LocalBodyElection pic.twitter.com/Y5eRPfbgTS
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 27, 2019
READ MORE














Click it and Unblock the Notifications