மதுரவாயல் பைபாஸ்ல ஆச்சரியம்.. தமிழகத்திலேயே முதல்முறையாக ரயில்வேயையே மிஞ்சி அசத்தல்..யார்னு பாருங்க
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் "புஷ் துரோ" முறையில் 56 மீட்டர் கல்வெட்டை பதித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்.
பருவமழை பெய்தாலே, போரூர் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரானது, அய்யப்பன் தாங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளில் நுழைந்து, அங்கு தண்ணீர் தேங்கிவிடுவது வழக்கம்.
மழைக்காலம்: அதனால், மழை காலங்களில் இந்த பகுதிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, மழை நீர் கால்வாய் அமைக்க முதல்வர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரூ.100 கோடி செலவில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து முடிந்தது.

அதேபோல, தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழை நீர் செல்ல வழி இல்லாததால், தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் இடர் எதுவும் ஏற்படாமல், புஷ் துரோ முறையில் தாம்பரம் - மதுரவாயல் பைபாசின் கீழ் 54 மீட்டருக்கு கல்வெர்ட்டு கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று முடிந்தது.
இப்போது, அதே பகுதியில் மறுபடியும் 56 மீட்டர் தூரத்துக்கு கல்வெர்ட் கால்வாயை புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த 2 மாதமாக நடைபெற்று முடிந்துள்ளது.
கல்வெட்டு: இதன் சிறப்பு என்னவென்றால், பிரதான சாலையை உடைக்காமல் கல்வெர்ட்டு உள்ளே தரைக்கு கீழ் நுழைக்கப்படும்... ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த கல்வெர்ட்டின் மீது கனமான இரும்பு அமைக்கப்பட்டு கம்பரசர் மூலமாக அழுத்தம் கொடுத்து புஷ் துரோ முறையில் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்தப்படும். நாள் ஒன்றுக்கு 2 மீட்டர் மட்டுமே இதனை செலுத்த முடியும்.

இப்போது, வரை 56 மீட்டரில் சாலையின் நடுவே 44 மீட்டரும், சாலைக்கு வலது புறமும், இடது புறமும் தலா 6 மீட்டர் விட்டு புஷ் அண்ட் துரோ கல்வெர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் சாலை விரிவாக்க பணி நடந்தால் இந்த பகுதியில் கல்வெர்ட்டின் மீது சாலை அமைத்து கொள்ளலாம். இதற்காக இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.
இந்த பணிகளை விரைந்து முடித்து, தார்சாலைகள் அமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம், ரயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான பணியை, நெடுஞ்சாலைத்துறையும் தற்போது அசத்திவிட்டது.
சபாஷ் பணிகள்: வாகன போக்குவரத்து மிகுந்த தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமலும், போக்குவரத்தை தடைசெய்யாமலும், 2 புஷ் அண்ட் துரோ கல்வெட்டை அமைத்துள்ளதே அந்த சாதனையாகும். இந்த பணிகளை நேற்று நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டதுடன், நெரிசல் மிகுந்த சாலைகளிலும் வெற்றிகரமாக இந்த பணி அமைக்கப்பட்டது குறித்து பாராட்டும் தெரிவித்தார்.
-
ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications