காஞ்சிபுரம் அருகே கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.4.50 கோடி..பணத்தை கேரளாவில் தேடும் போலீசார்!
சென்னை: காஞ்சிபுரம் அருகே கத்தி முனையில் 4.5 கோடி ரூபாயை காருடன் கடத்திய 5 கேரள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியில் எடுத்து, கேரளா அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூபாய் 4.5 கோடி பணத்தை கைப்பற்ற தனிப்படையினர் கேரளா சென்றுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள போரிவலி பகுதியைச் சேர்ந்தவர் ஜாடின் (56). இவர், தன் சகோதரருடன் சேர்ந்து, 2017ல் இருந்து, கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தின் மூலம், கமிஷன் அடிப்படையில் நாடு முழுதும் பணம் மற்றும் பொருட்களை அனுப்பி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி, 'ஹூண்டாய் கிரெட்டா' காரில் உள்ள லாக்கரில், 4.5 கோடி ரூபாயை வைத்து, தங்கள் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் பியூஷ்குமார், தேவேந்திர படேல் ஆகியோரை, கர்நாடக மாநிலம் பெங்களூரொல் இருந்து, சென்னை சவுகார்பேட்டைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
2 மாதங்களுக்கு முன் இந்த கார் காஞ்சிபுரம், ஆட்டுப் புத்துார் அருகே வந்தபோது, மூன்று கார்களில் வந்த மர்ம நபர்கள், பியூஷ்குமார் மற்றும் தேவேந்திர படேல் சென்ற காரை மடக்கினர். கத்தி முனையில், பணத்துடன் அந்தக் காரை கடத்தினர். ஆற்காடு அருகே சென்ற போது, பணத்தை கொள்ளையடித்து விட்டு, அந்த காரை அங்கேயே விட்டுச் சென்றனர். ஓட்டுநர்கள் பியூஷ்குமார், தேவேந்திர படேல் ஆகியோரையும், அங்கேயே இறக்கிவிட்டு தப்பினர்.
இச்சம்பவம் குறித்து, மும்பையில் இருந்த தங்கள் நிறுவன உரிமையாளர் ஜாடினிடம், இருவரும் தகவல் தெரிவித்தனர். அதன்படி, ஜாடின் காஞ்சிபுரம் வந்து, பொன்னேரிக்கரை போலீசாரிடம் புகார் அளித்தார். எஸ்.பி சண்முகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன், தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று பாலக்காடு, கொல்லம், திருச்சூர் மாவட்டங்களைச் சேர்ந்த சந்தோஷ் (42), சுஜிலால் (36) உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் மேலும் 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படை போலீசார், கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியில் எடுத்து, கேரளா அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 4.5 கோடி பணத்தை கைப்பற்ற தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications