ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா பாக்கறியா.. செல்போனை தூக்கி அடித்த சிவகுமாரை மறக்க முடியுமா!
சென்னை: தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதையும் அதன் பின்னர் அவர் வருத்தம் தெரிவித்ததையும் மறக்க முடியுமா.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டனர்
அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களில் ஒருவர் உள்ளே வந்து சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்க முயன்றார்.

பரபரப்பு
உடனே யாரும் எதிர்பாராத வேளையில் சிவக்குமார் அவரது போனை தட்டி விட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த ரசிகர் யாரிடமோ இதுகுறித்து முறையிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர்கள் வருத்தம்
இது பெரும் விவாதப் பொருளானது. பொதுவாக அனைவரையும் யோகா, உடற்பயிற்சி செய்யுமாறு கூறும் சிவக்குமார் அதிகாலை 4 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்து முடித்துவிட்டார். அத்தகைய பொறுமைசாலியான அவர் பொது இடம் என்று கூட பார்க்காமல் இது போன்ற ஒரு செயலை செய்திருப்பது ரசிகர்களை மன வருத்தமடைய செய்தது.

சிவக்குமார் விளக்கம்
செல்போனை தட்டி விட்டது ஏன் என்பது குறித்து சிவக்குமார் விளக்கமளிக்கையில் பொது இடத்தில் பலர் இருக்கும் போது செல்பி எடுப்பது தவறு. பொது இடத்தில் மொத்தம் 300 பேர் இருக்கும் இடத்தில் செல்பி எடுப்பது தவறு. நான் காரில் இருந்து இறங்கி விழா மண்டபத்திற்கு செல்வதற்கு முன் என்னுடைய பாதுகாவலர்களை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு வரிசையாக பலர் வந்து செல்பி எடுத்து எனக்கு இடையூறு செய்வது சரியா? என்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா? விஐபி என்றால் இப்படி புகைப்படம் எடுப்பதில் நியாயம் இருக்கிறதா? என்று கேட்டிருந்தார்.
|
பொறுமை
இதையடுத்தும் நெட்டிசன்கள் சிவக்குமாரை வறுத்தெடுப்பதை நிறுத்தவில்லை. இதனால் அவர் ஒரு வீடியோ மூலம் தோன்றி வருத்தம் தெரிவித்தார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில் ஆர்வமிக்க ரசிகர்கள், கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படிதான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். அதை திரைப்பட கலைஞன் பொறுத்து கொள்ள தான் வேண்டும்.

நிரூபணம்
சிவக்குமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில் எனது செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். ஐ யாம் சாரி என இயல்பாக கூறியதன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து அந்த இளைஞருக்கு 20 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் சிவக்குமார் வாங்கிக் கொடுத்து மேன் மக்கள் மேன் மக்கள்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications