வெள்ள பாதிப்புக்கு ரூ.2 ஆயிரம் எப்படி போதும்? 10,400 கொடுங்க.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது போதாது என்றும் ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவான 'ஃபெஞ்சல்'புயலால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் அந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகை போதாது என்றும் ரூ.10,400 அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
கடலூரில் ஏற்பட்டுள்ள புயல் வெள்ளத்தால் விவசாய பயிர்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை வந்து விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது என்பது தான் எங்களுடைய கேள்வி. சாத்தனூர் அணையை திறந்து விட்ட பிறகுதான், இந்த பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 4.30 மணிக்கு 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடியை திறந்து விட்டு பெரிய பாதிப்பை மாநில அரசே ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கப்பட்டது. நகரமாக இருந்தாலும், கிராமங்களாக இருந்தாலும் பாதிப்பு ஒன்று தான். கிராமங்களில் இன்னும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சென்னையை விட அதிக மழை பெய்ததுள்ளது. அப்படி இருக்கும் போது ஒரு ரேஷன் காருக்கு 2 ஆயிரம், ஒரு ரேஷன் கார்டுக்கும் 6 ஆயிரம்.. எப்படி அது நியாயம்.
எனவே ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும். மத்திய அரசு விதிளின் படி கணக்கிட்டு பார்த்தால் ரூ.10,400 கொடுக்க வேண்டும். முதல்வர் கிராமப்புற பகுதிகளுக்கு வரவேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் வர வேண்டும். கிராமப்புற பகுதிக்கு வந்தல்தால் எந்த அளவு சேதாரம் இருக்கிறது என்று தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
-
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!











Click it and Unblock the Notifications