அக்கவுண்ட்டில் பணம் வரலியா.. வீட்டு முன்னாடி போட்டோ எடுக்கணுமாமே.. தமிழக அரசின் அதிரடி.. விறுவிறு பணி
சென்னை: வெள்ள நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இது தொடர்பான அறிவிப்பும் வந்துள்ளது.
உலுக்கிவிட்டு சென்ற, மிச்சாங் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. எனவே, பாதிக்கப்பட்ட இந்த 4 மாவட்ட மக்களுக்கும் வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் அறிவிக்கப்பட்டது.

ரேஷன் கடைகள்: சம்பந்தப்பட்டவர்கள், டோக்கன் கொடுத்து, அவரவர் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்.. இந்த பணிகள் ஓரளவு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ரேஷன் கடைகளில் விண்ணப்பித்த பொது மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இதற்காக சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்திருக்கிறார்கரள்.. அதாவது மொத்தமாக 5.55 லட்சம் பேர் இந்த நிதிக்காக விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது..
வருமான வரி: எனினும், இந்த லிஸ்ட்டில் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும், அவர்களது வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது அவர்களது உடைமைகள் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அவர்கள் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்று அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.
அதனால்தான், தற்போது புதிதாக ஒரு செயலியை (ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது.. இதில், விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களையும் ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகிறார்கள்.. அதன்படி, ஆதார் நம்பர், வங்கிக் கணக்கு நம்பர், செல்போன் நம்பர் பதிவு செய்வதுடன் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் போட்டோவையும் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது..
விண்ணப்பம்: அதன்படி ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி தந்தவர்களை, அவர் வீட்டு அருகிலேயே நிறுத்தி போட்டோ எடுக்கும் பணிகளும் ஆரம்பமாகி உள்ளன.. இந்த பணியில் கிராம நிர்வாக அதிகாரி, அவரது உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்..
இப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகுதான், அவரவர் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட உள்ளதாம்.. அப்போது தான் விண்ணப்பித்தவர்களில் யார் யாருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும் என்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications