நம் கையில் மாநில அரசு.. நாம் காட்டுவதே மத்திய அரசு... கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக!

    சென்னை: நாடே இன்று தேர்தல் முடிவை எதிர்பாத்து கொண்டிருக்கும் நிலையில், நம் கையில் மாநில அரசு, நாம் காட்டுவதே மத்திய அரசு என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சமாதியில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் கருணாநிதி சமாதியில் தினமும் புதுப்புது அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாள் வைக்கப்படும் அலங்காரம் மறுநாள் காலை 7 மணிக்கு அகற்றப்பட்டு, புதிய அலங்காரம் செய்யப்படுகிறது. கலை இயக்குனர் ஜே.பி.கிரு‌ஷ்ணா குழுவினர் வடிவமைத்து வருகின்றனர்.

    Flower decoration in Karunanidhi Memorial

    முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை குறிக்கும் விதமாக, கருணாநிதி சமாதியில், 40க்கு 40 என, மலர் அலங்காரம் செய்திருந்தனர். தமிழகத்தில், 39 மக்களவைத் தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் சேர்த்து, 40 தொகுதிகள் என, குறிப்பிட்டு இருந்தனர்.

    கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை பங்கீடு செய்த திமுக மற்ற 20 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து, வேலூரில் மக்களவைத் தேர்தல் நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

    மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையுடன், தமிழகத்தில் நடந்த 22 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. இதன் வெற்றி நிலவரம் பொறுத்தே தமிழகத்தில் ஆட்சியை யார் கைப்பற்றுவது என்பது தெரியவரும். இதனால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+