ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்.. பூக்களின் விலை கிடுகிடு உயர்வு! மக்கள் கவலை
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு மல்லிகைப்பூக்கள் கிலோ 4,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2020ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெறுகிறது. இன்று இரவு 12 மணிக்கு 2021 ஆம் ஆண்டு பிறக்கிறது. நாளை ஆங்கிலப்புத்தாண்டு என்பதால் பெரும்பாலானோர் கோயிலுக்கு செல்வர்.

இந்த நிலையில் பூக்களின் டிமான்டை முன்னிட்டு அதன் விலை ஒவ்வொரு பண்டிகையின் போதும் கிடுகிடுவென உயர்வது வாடிக்கைதான். அந்த வகையில் மல்லிகைப்பூவின் விலை தற்போது அதிகமாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினந்தோறும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இத்தனை சில்லறை வியாபாரிகள் முதல் உள்ளூர் வியாபாரிகள் வரை வாங்கிச் செல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த பூ மார்க்கெட்டிலிருந்து சென்னை, கோவை, சேலம், பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பூக்களின் வரத்து சற்று குறைவாகவே இருந்தது.
10, 15 கிலோ வர வேண்டிய கடைகளுக்கு ஒரு கிலோ மட்டுமே வந்தது. விலை அதிகரிப்பு விவசாயிகளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும் போதிய வரத்து இல்லாததால் வேதனை அடைந்துள்ளார்கள். அது போல் பிச்சி பூக்களின் விலையும் அதிகமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications