மாஸ் வேகத்தில் வளரும் திண்டிவனம்.. வருகிறது மிகப்பெரிய நிறுவனம்.. உருவாகிறது அடுத்த டாப் சிட்டி?
சென்னை: டாபர் நிறுவனம் திண்டிவனத்தில் உள்ள SIPCOT உணவுப் பூங்காவில் வரவிருக்கும் ஆலைக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது. இந்தியாவின் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்களில் ஒன்றான டாபர், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவ ரூ.400 கோடி முதலீட்டைச் செய்து உள்ளது.
இது தென்னிந்தியாவில் டாபரின் முதல் உற்பத்தி ஆலை ஆகும். இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. இந்த நிலையில் வரவிருக்கும் ஆலைக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது.

ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்வதற்காக 1884 ஆம் ஆண்டு எஸ்.கே. பர்மனால் நிறுவப்பட்ட டாபரின் மூலோபாய நடவடிக்கை மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. மெஸ்வாக் மற்றும் பபூல் பற்பசைகள், வாடிகா, ஆம்லா மற்றும் பாதாம் எண்ணெய்கள், சியாவன்ப்ராஷ், ஓடோமோஸ், ஹோனிடஸ் இருமல் சிரப், குலாபரி உட்பட பல பொருட்கள் டாபர் மூலம் தயாரியாக்கப்படுகின்றன. இவை இனி திண்டிவனத்தில் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Foxconn, Kaynes, FreeTrend, Tata Motors, Rockwell, Nokia, Leap Green போன்ற பல நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் முக்கிய முதலீடுகளை செய்து உள்ளன. தமிழகத்தில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசெம்பிளிங் யூனிட்டை அமைப்பதற்காக சுமார் $1 பில்லியன் முதலீட்டை செய்ய Foxconn நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தைவானிய ஒப்பந்த உற்பத்தியாளர் Foxconn நிறுவனம் மூலம் அமைக்கப்படும் இது போன்ற முதல் தொழிற்சாலை இதுவாகும். அந்த நிறுவனத்தின் பல தொழிற்சாலை இந்தியாவில் இருந்தாலும், டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசெம்பிளிங் யூனிட்டை அமைப்பது இதுவே முதல்முறை. இதிலிருந்து ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திற்கு டிஸ்ப்ளே மாட்யூல்கலாய் வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் வரும் காலங்களில் ஃபாக்ஸ்கானின் டிஸ்ப்ளே மாட்யூல் மற்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களான பெகாட்ரான் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்படும். இத்தனை நாட்கள் சீனாவில் அசெம்பிள் செய்யப்பட்ட மாட்யூல்களை இறக்குமதி செய்து இவர்கள் பயன்படுத்தினர் . இதற்கு பதிலாக இனி ஃபாக்ஸ்கானின் டிஸ்ப்ளே மாட்யூல்களை பெகாட்ரான் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்த முடியும்.
சீனா + 1 எனப்படும் மாடலின் அடிப்படையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளியே உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் நினைக்கின்றன. அவர்களின் தேர்வாக தமிழ்நாடே இருக்கிறது. இதற்கான தொழிற்சாலை சென்னையில் ஏற்கனவே உள்ள ஃபாக்ஸ்கானின் ஆலை அருகே கட்டப்படும். மிக விரைவில்.. கூடிய சீக்கிரம் அங்கே உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பாக்ஸ்கான் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இன்று தமிழக அமைச்சரவை பல்வேறு முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. Foxconn, Kaynes, FreeTrend, Tata Motors, Rockwell, Nokia, Leap Green போன்ற பல நிறுவனங்கள் முக்கிய முதலீடுகளை செய்து உள்ளன.
இதற்கான முழு லிஸ்ட் இங்கே வழங்கப்பட்டு உள்ளது: இதில் பெரிதும் வளராத அரியலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், அரியலூர் போன்ற மாவட்டங்களுக்கு முதலீடுகள் குவிந்து உள்ளன. அரியலூர் போன்ற பெருமளவில் பின்தங்கிய மாவட்டத்தில் பெரும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. வியட்நாமைச் சேர்ந்த ஷூ உற்பத்தியாளர் "ஃப்ரீடிரெண்ட்" 1,000 கோடி செலவில் 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது . இங்கே காலணி உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.
Freetrend Industrial India Pvt. லிமிடெட் அரியலூர்
கிராண்ட் அட்லாண்டியா பனப்பாக்கம் SEZ டெவலப்பர்ஸ் பிரைவேட். லிமிடெட். ராணிப்பேட்டை
கெய்ன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட். லிமிடெட் காஞ்சிபுரம்
அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட். லிமிடெட் கிருஷ்ணகிரி
லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட். லிமிடெட் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம்
டேப்லெட்ஸ் இந்தியா லிமிடெட் செங்கல்பட்டு
விஸ்டியன் குழுமம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர்
லூகாஸ் டிவிஎஸ் குரூப் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி
மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட். செங்கல்பட்டு, திருவண்ணாமலை
Nokia Solutions & Networks India Pvt. லிமிடெட். காஞ்சிபுரம்
ராக்வெல் குரூப் 12 சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜ் பிரைவேட். லிமிடெட். காஞ்சிபுரம்
சூப்பர் ஆட்டோ செங்கல்பட்டு, காஞ்சிபுரம்
Yuzhan Technology (India) Pvt. லிமிடெட். காஞ்சிபுரம்
டாடா மோட்டார்ஸ் லிமிடெட். ராணிப்பேட்டை
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications