வீராங்கனை பிரியா மரணம்- மருத்துவர்கள் சிகிச்சையில் குறையும் இல்லையே-அமைச்சர் மா.சு. புது விளக்கம்
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்த குறையும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்களை கைது செய்யக் கூடாது என்கிறது மருத்துவர்கள் சங்கம்.
மருத்துவர்கள், பிரியாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த பிரச்சனையும் குறையும் இல்லை. ஆனால் மருத்துவர்கள் கவன குறைவாக, அலட்சியமாக நடந்து கொண்டனர் என்பதுதான் குற்றச்சாட்டு. மருத்துவர்களும் கூட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்; குற்றவியல் நடவடிக்கைதான் கூடாது என்கின்றனர். அத்துடன் இதனை கொலை குற்றமாக கருதவும் கூடாது; துறை ரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருகிறோம் என்கின்றனர் டாக்டர்கள்.

வல்லுநர்களுடன் ஆலோசனை
நாளை மறுநாள் அதாவது வரும் 23-ந் தேதியன்று 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அக்கூட்டத்தில் அறுவை சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மெட்ராஸ் ஐ பாதிப்பு
மெட்ராஸ் ஐ குறித்து கூறுகையில், பருவநிலை மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள மெட்ராஸ் - ஐ எனும் கண் நோயானது டிசம்பர் 2 வது வாரத்தில் குறையத் தொடங்கிவிடும். தற்போது கண் நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பிரியா பின்னணி
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவி என்பவரது மகள் பிரியா. இவர் கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கால்பந்தாட்டத்தில் சாதிப்பதில் முனைப்புடன் இருந்தார் பிரியா. அவருக்கு கால்வலி ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றார். பிரியாவின் காலில் சவ்வு பிரச்சனை இருந்தது. இதனால் முதலில் சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

பிரியா மரணமும் சர்ச்சையும்
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு 2 மருத்துவர்கள் அறுவை சிக்ச்சை செய்தனர். அப்போது இறுக்கமான கட்டும் போட்டிருக்கின்றனர். இதனால் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனைக்கு பிரியா மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா மரணம் அடைந்தார். பிரியாவின் மரணம் பெரும் சர்ச்சையானது. இதனால் பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications