Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்ஜிஆரின் நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம் காலமானார்.. யார் இவர் தெரியுமா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் உதவியாளராக இருந்த மகாலிங்கம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி சோகமான தகவல் வெளியாகி உள்ளது.

நடிகராக இருந்து தமிழக அரசியலில் ஜொலித்தவர்களில் முன்னோடியாக இருப்பவர் எம்ஜிஆர். அதிமுகவை உருவாக்கி முதலமைச்சர் பதவியையும் எட்டிப்பிடித்தார். எம்ஜிஆர் 1987 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி மறைந்தார்.

mgr aide tamilnadu mahalingam

எம்ஜிஆரிடம் ஏராளமானவர்கள் உதவியாளர்களாக பணியாற்றினர். அதில் முக்கியமானவர் மகாலிங்கம். இவர் சென்னை ஆர்ஏ புரத்தில் வசித்து வந்தார்.

சமீபத்தில் யூடியூப் சேனல்களுக்கு அவர் பேட்டியளித்து வந்தார். எம்ஜிஆர் உடனான உறவு உள்பட பல்வேறு விஷயங்களை அவர் யூடியூப் சேனல்களில் பகிர்ந்து வந்தார். மகாலிங்கத்துக்கு தற்போது 73 வயது ஆனது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் மகாலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் காலமாகிவிட்டார். அண்மைக் காலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்த மகாலிங்கம் தனது குடும்பம் வறுமையில் இருப்பதாக கூறினார். அதோடு யாரும் உதவி செய்யவில்லை என வருத்தம் தெரிவித்து இருந்தார். இப்போது உடல்நலக்குறைவால் அவரது உயிர் பிரிந்தது. மகாலிங்கத்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக ஆர்ஏ புரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காலமான மகாலிங்கம் எம்ஜிஆரிடம் 1972ம் ஆண்டு முதல் அவரது மறைவு வரையிலான 1987ம் ஆண்டு வரை நேர்முக உதவியாளராக இருந்தார். மகாலிங்கத்தின் தந்தை பெயர் குண்டு கருப்பையா. இவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் குண்டு கருப்பையாவின் மூத்த மகன் மகாலிங்கம். இவரது தம்பி நடிகர் குண்டு கல்யாணம்.

இன்னொரு சகோதரரின் பெயர் சாமிநாதன். இவர் அதிமுக தலைமை கழகத்தின் கேஷியராக பணியாற்றி இருந்தார். இப்படி மகாலிங்கத்தின் குடும்பத்தினர் எம்ஜிஆர் உடன் மிகவும் நெருக்கமாகவாக இருந்தனர். தந்தை குண்டு கருப்பையா மறைந்த பிறகு மகாலிங்கத்தை தனது நேர்முக உதவியாளராக எம்ஜிஆர் சேர்த்து கொண்டார்.

இதனால் மகாலிங்கம் தனது பல பேட்டிகளில் எம்ஜிஆரை தெய்வம் என்றே கூறி வந்தார். மேலும் அவரது தந்தை உள்பட குடும்பத்துக்கு இருந்த கடனை எம்ஜிஆர் தானே முன்வந்து செலுத்தியதாகவும், 3 தங்கை மற்றும் 2 சகோதரர்கள் மட்டுமின்றி தனது திருமணத்தை எம்ஜிஆரே முன்நின்றே நடத்தியதாகவும் பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். தற்போது மகாலிங்கம் தனது 73வது வயதில் மறைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+