ஓபிஎஸ் - சசிகலா திடீர் சந்திப்பு.. காரில் இருந்து இறங்கி உரையாடல்.. என்ன பேசினார்கள்? வெளியான தகவல்!
சென்னை: சசிகலாவும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று நேருக்கு நேர் சந்தித்து உரையாடினர். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தபோது இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஆயிரக்கணக்கான திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று மலர்தூவி மரியாதை செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஓ.பன்னீர்செல்வம், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்து காரில் கிளம்பியபோது, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் அப்பகுதிக்கு காரில் வந்தார்.
சசிகலா வருவதை கவனித்த ஓ.பன்னீர்செல்வம், காரில் இருந்து இறங்கிச் சென்று, சசிகலாவை பார்த்தார். காரில் இருந்தபடி, கண்ணாடியை இறக்கிவிட்டு பேசிய சசிகலா, பின்னர் காரில் இருந்து இறங்கி ஓபிஎஸ்ஸிடம் நலம் விசாரித்து, சில நிமிடங்கள் பேசினார். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். ஓபிஎஸ் அருகே நின்ற வைத்திலிங்கத்திடமும் நலம் விசாரித்தார் சசிகலா.
எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட பிறகு, போட்டியாக கட்சியை நடத்தி, நிர்வாகிகளை நியமித்து வந்தார் ஓபிஎஸ். தொடர்ந்து, டிடிவி தினகரனையும் சந்தித்தார். சசிகலாவையும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் எனக் கூறியிருந்தார் ஓபிஎஸ். ஆனால், ஒன்றரை ஆண்டு காலமாக இருவரும் சந்திக்காமலேயே இருந்து வந்தனர்.
இந்நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இடையேயான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சந்திப்பு யதேச்சையானதல்ல என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடந்த முறை எம்.ஜி.ஆர் நினைவு நாளன்று இதேபோல, ஒரே நேரத்தில் ஓபிஎஸ்ஸும் சசிகலாவும் எம்ஜிஆர் நினைவிடத்தில் இருந்தனர். ஆனால், ஓபிஎஸ் இருந்ததையடுத்து, ஓபிஎஸ் அங்கிருந்து கிளம்பும் வரை காரில் இருந்து இறங்காமலேயே காத்திருந்தார் சசிகலா.
ஓபிஎஸ் தனது காரில் கிளம்பிய பிறகு தான், சசிகலா காரில் இருந்து இறங்கி, எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்றார். ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓபிஎஸ், சசிகலா இருவரும் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
-
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக












Click it and Unblock the Notifications