காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று 4 மாவட்ட எஸ்பிக்களை அதிரடியாக இடமாற்றம் செய்து புதிய எஸ்பிக்களை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இவர்கள் நாளை காலை 11 மணிக்குள் அந்த மாவட்டங்களில் பொறுப்பேற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களின் எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் எஸ்பியாக ஜவஹர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் எஸ்பியாக பிரபாகர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி எஸ்பியாக மயில் வாகனன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பணி நியமன உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. நாளை காலை 11 மணிக்குள் நான்கு பேரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் எஸ்பியாக பொறுப்பேற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications