Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச வீட்டு மனை பட்டா..சென்னை ஹைகோர்ட் அதிரடி.. திருவள்ளூர் மாவட்டத்தில் என்ன நடந்தது? யாரந்த பாட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வயதை காட்டி மூன்றாம் நபர்கள் துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு உள்ளதால், இலவச வீட்டுமனை பட்டா வழங்க...கோரிய, 80 வயது மூதாட்டியின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது....

வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதியை உறுதிசெய்யும் நோக்கில் வருவாய்த் துறை மூலம் தகுதியான பயனாளிகளுக்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டுமனை பட்டாக்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

Free House Plot Patta and what did Chennai High court say about 80 year old womans Petition

அதேபோல, புறம்போக்கு நிலங்கள் போதிய அளவு இல்லாவிட்டால், பிற ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து, கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு மாற்றம் செய்தும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

ஆதி திராவிடர்: இதுதவிர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையால் ஏற்கெனவே கடந்த காலங்களில் நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு இணையவழியில் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. மேலும், பாதுகாக்கப்பட்ட வனங்களில் நீண்டகாலமாக குடியிருந்து வேளாண்மை செய்யும் மலைவாழ் மக்கள், பழங்குடியினருக்கு அவர்கள் வசிக்கும், வேளாண்மை செய்து வரும் இடத்துக்கான நில உரிமை பட்டாக்களும் வழங்கப்படுகிறது.

கருணாநிதி: இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100 இடங்களில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம்கள் நடத்த அரசு முடிவெடுத்து, அதை நடத்தியும் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இலவச வீட்டு மனை குறித்த வழக்கு ஒன்று பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், அம்மனம்பாக்கத்தை சேர்ந்தவர் சொக்கம்மாள்.. இவருக்கு 80 வயதாகிறது.

இவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள். ஆனால், ஒருத்தரும் இவரை கவனிக்கவில்லை.. வசிப்பதற்கு வீடும் இல்லை.. அதனால், இலவச வீட்டுமனை பட்டாவை கோரியிருந்தார்.. எனினும், இவரது மனுவை, திருவள்ளூர் தாசில்தார் நிராகரித்துவிட்டார்.. இதனால் அதிர்ந்து போன சொக்கம்மாள், இதை எதிர்த்து, ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.. இலவச வீட்டுமனை பட்டா வழங்க, அரசுக்கு உத்தரவிடவும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு இதுதான்:

Free House Plot Patta and what did Chennai High court say about 80 year old womans Petition

தீர்ப்பு தந்த நீதிபதி: "நீர் நிலையை சிலர் ஆக்கிரமித்து வசித்துள்ளனர்... அவர்களுடன் மனுதாரர் வசிக்கவில்லை.. உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விட்டு, அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன், அதே நீர் நிலையில் மனுதாரர் கூரை அமைத்துள்ளார். ஆனால், அதில், அவர் வசிக்கவில்லை.

வாரிசுகள் கவனிக்கவில்லை என்றால், பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் நிவாரணம் கேட்டு, உரிய அதிகாரிகளுக்கு மனுதாரர் விண்ணப்பிக்கலாம். வாரிசுகளிடம் இருந்து உதவி பெற விரும்பவில்லை என்றால், அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளபடி, முதியோர் இல்லத்தில் தங்கலாம்....

தள்ளுபடி: தகுதியுள்ளவர்களுக்கு தான், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்கி, இலவச வீட்டுமனை பட்டா பெற, சிலர் முயற்சிக்கின்றனர். இந்த மனுதாரருக்கு, 80 வயது ஆகிறது. இவரது வயதை வைத்து, மூன்றாம் நபர்கள் துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், வாரிசுகளுடன் இவர் இல்லை. அதனால், மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்ததில் தவறு இல்லை.. இந்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+