Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரெடிட் கார்டு முதல் பேடிஎம் வரை.. இந்த மாதம் முதல் மாறப்போகும் 6 முக்கிய விஷயங்கள்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை; பொதுவாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பல்வேறு விஷயங்கள் அப்படியே மாறும். பல்வேறு பொருட்களின் விலை மாறும். அதேபோல் சில அடையாள அட்டைகள், விதி முறைகள் இந்த மார்ச் மாதம் முதல் மாற உள்ளது.

நடப்பு நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் முதல் தேதியில் இருந்து பல புதிய விதிகள் அமலுக்கு வரும். இந்த புதிய விதிகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும், இது கிட்டத்தட்ட ஒவ்வொரு பயனரையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Paytm Payments Bank தடை, SBI கிரெடிட் கார்டு மாற்றும், FASTag KYC CNG மற்றும் LPG விலைகள் போன்றவை சில முக்கியமான மாற்றங்களாக பார்க்கப்படுகின்றன.

From Credit card to Cylinder price: 6 things are going to change from today March 1

ஜிஎஸ்டி விதிகளில் மாற்றங்கள்: புதிய ஜிஎஸ்டி வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருப்பதால், ஆண்டுக்கு ரூ. 5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் எந்தவொரு வணிகமும், தங்களின் அனைத்து பி2பி பரிவர்த்தனைகளுக்கும் இ-இன்வாய்ஸ்களைச் சேர்க்காமல் இ-வே பில்களை உருவாக்க முடியாது.

பாஸ்ட் டாக்; இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) FASTag பயனர்களுக்கான KYC-ஐ புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மார்ச் இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. FASTag பயனர்கள் தங்கள் KYC விவரங்களை புதுப்பிப்பதை NHAI கட்டாயமாக்கியது. அவ்வாறு செய்யாவிட்டால், புதுப்பிக்கப்படாத தகவல்களுடன் கூடிய FASTag கணக்குகள் செல்லாது என வங்கிகள் கருதலாம்.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு: மார்ச் 15 முதல், பாரத ஸ்டேட் வங்கி (SBI) அதன் கிரெடிட் கார்டுகளில் குறைந்தபட்ச நாள் பில் கணக்கீடு செயல்முறையை மாற்றுகிறது. வரவிருக்கும் இந்த மாற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க ஏற்கனவே மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர்

Paytm Payments வங்கி: Paytm Payments வங்கிக்கான காலக்கெடுவையும் அதன் சேவைகளுக்கான செயல்பாட்டுத் தடையையும் மார்ச் 15, 2024 வரை RBI நீட்டித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் இருவரும் தங்களது கணக்குகளை உரிய தேதிக்கு முன்னதாக மாற்று வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. முன்னதாக பிப்ரவரி 29க்குப் பிறகு Paytm Payments வங்கி அதன் சேவைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டு தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

சிலிண்டர் விலை: கடந்த அக்டோபர் மாதம் கடைகளில் விற்கப்படும் ரூ.1,695க்கு விற்ற சிலிண்டர், ரூ. 1,898-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ. 1068க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் மாதம் இந்த நிதி ஆண்டு முடிவதால் சிலிண்டர் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் கடைகளில் விற்கப்படும் சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் ஆகியவை விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பான்கார்டு ; விரைவில் நாடு முழுக்க பாண் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். மார்ச் மாதம் இந்த மாற்றம் கொண்டு வரப்படலாம். அதன்படி தற்போது தனியார் நிறுவனங்கள், சிறிய சிறிய அமைப்புகள் கூட பான் கார்டு விண்ணப்பம் செய்ய வழி உள்ளன. ஆதார் போல தனியாக மையங்களாக செயல்படாமல்.. சிறிய சிறிய கடைகளில் கூட பான் கார்டு விண்ணப்பங்களை செய்யும் வசதிகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+