லோன் தள்ளுபடி, மானியம்! வளர்ப்பு கட்டண உயர்வு கோரும் கறிக்கோழி பண்ணையாளர்கள்! சபாஷ் கொங்கு ஆறுமுகம்
சென்னை: கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொங்கு மக்கள் முன்னணி தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளது.. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த கோரிக்கை மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
கோழிப்பண்ணை, குறிப்பாக கறிக்கோழி வளர்ப்பிற்கு கூட்டுறவு வங்கி, எஸ்பிஐ வங்கி உள்ளிட்டவைகளில் கடன் பெறலாம்.

கூட்டுறவு வங்கிகள் சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களுக்கு ஏற்றவை. இங்கே பண்ணை கட்டடம், உணவு, மருந்து, ஊழியச் செலவுகள் போன்றவற்றுக்கு கடன் தரப்படுகிறது. சில சமயங்களில் சிறப்பு மானியம், SC/ST/பெண்கள் ஆதரவு போன்றவையும் கிடைக்கும். வட்டி சுமார் 14-16% இருக்கும்.
எஸ்பிஐ, கூட்டுறவு வங்கி கடன் வசதி
எஸ்பிஐ மற்றும் பிற பெரிய வங்கிகள், புதிய அல்லது பெரிய பண்ணை திட்டங்களுக்கு அதிக தொகை கடன் வழங்குகின்றன. இவை சாதாரணமாக 7-9% வட்டி விகிதத்தில் கிடைக்கும். NABARD refinance, அரசுத் திட்டங்களுடன் சேர்ந்து, வங்கி மூலம் கடன் எடுக்கலாம். இவ்வாறான வசதிகள் இருந்தாலும் கோழிப்பண்ணையாளர்களுக்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
கரிமூட்டை ரூ.500 ல் இருந்து ரூ.2 ஆயிரம் வரையும், தொழிலாளர் சம்பளம் ரூ.400ல் இருந்து ரூ. ஆயிரம், கரண்ட் பில் என அனைத்தும் உயர்ந்துள்ளது..
ஆனால் குஞ்சுகளை தரும் கம்பெனிகள் ஒரு கிலோவுக்கு ரூ.6.50 தான் தருகின்றன. இதனால் கட்டுப்படியாகவில்லை என்று கூறி கடந்த ஜனவரி 1 முதல் பண்ணையாளர்கள் கம்பெனிகளுக்கு குஞ்சுகளை வளர்த்துத் தர மறுத்து, அவற்றை வாங்க மறுக்கின்றனர்.
கறிக்கோழிக்கு கிராக்கி
இதனால் கறிக்கோழிக்கு கிராக்கி ஏற்பட்டு, கிலோ ரூ.210க்கு விற்ற சிக்கன் விலை சில இடங்களில் ரூ.280 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது..
கிலோவுக்கு ரூ.6.50 என்பதை ரூ.20 ஆக உயர்த்த வேண்டும். இதற்கு குஞ்சு தரும் நிறுவனங்களை அரசுகள் அழைத்துப் பேச வேண்டும். மானியம், கடன் தள்ளுபடி போன்ற சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெடித்து வருகிறது.. தற்போதைக்கு கறிக்கோழி வளர்ப்பு தான் விவசாயிகளுக்கு பேருதவியாய் இருந்து வருகிறது.
ஆனால் மிகக் குறைவான கூலி வழங்கப்படுவதால், கோழிப்பண்ணையாளர்கள் கடன் நெருக்கடியில் தவித்து வருவதாக தெரிகிறது..
கோழிப்பண்ணைக்கு மின்சாரம்
குறிப்பாக விவசாயம் சார்ந்த கோழிப்பண்ணைக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். 50 கிராம் எடையுள்ள தரமான கோழி குஞ்சுகளையும், தரமான தீவனங்களையும் ஆண்டுக்கு 5 முறை வழங்க வேண்டும். பண்ணையாளர்கள் மற்றும் பண்ணை தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பண்ணையாளர்கள் தொடர்ந்து விடுத்தபடி உள்ளனர்..
இப்படிப்பட்ட சூழலில் கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் மிக முக்கியமான வேண்டுகோளை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்..
கொங்கு மக்கள் முன்னணி ஆறுமுகம்
ஆறுமுகம் சொல்வதாவது, "விவசாயிகள் கறிக்கோழி பண்ணைகளை அமைத்து, பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து வழங்கி வரும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பு என்பது விவசாயிகளின் முக்கியமான சார்பு தொழிலாக இருந்து வருகிறது.
கோழிப்பண்ணை உரிமையாளர்கள்
கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு தேவையான குஞ்சுக் கோழிகள் மற்றும் தீவனங்களை நிறுவனங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலும், வாய்மொழி அல்லது எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் வழங்கிடுவதோடு அதன் வளர்ப்புக்காக கிலோக்கு சுமார் சராசரியாக ரூ.6 என்ற அளவில் மட்டுமே தொகையை நிர்ணயம் செய்து கொடுத்து வருகின்றனர்.
இந்த தொகையை நிர்ணயிப்பதும், அதில் ஏற்படும் உயர்வு-குறைவு ஆகியவற்றை தீர்மானிப்பது முழுமையாக நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால் மறுபுறம், கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்படும் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
குறிப்பாக தேங்காய் மஞ்சி தூள், கரி, தொழிலாளர்கள் கூலி, லாரி தண்ணீர் செலவு, மின் கட்டணம், பண்ணை பராமரிப்பு மற்றும் கட்டிடத்திற்கான முதலீடு என பல்வேறு செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, கடுமையான உழைப்பைத் தவிர வேறு எந்த லாபமும் கிடைக்காத வேதனையான நிலை தான் பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு - வளர்ப்பு கட்டணம்
எனவே கோழிப்பண்ணை உரிமையாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறுவனங்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டு, வளர்ப்பு கட்டணத்தை உயர்த்தி வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு நிறுவனங்கள் செய்யத் தவறும் பட்சத்தில், இந்தத் துறையில் தமிழ்நாடு அரசு தலையீடு செய்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
மேலும், பெரும் வணிகமாகவும், பொதுமக்களின் முக்கிய உணவுத் தேவையை பூர்த்தி செய்து வரும் கறிக்கோழி தொழில் எந்தவித தடையுமின்றி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமெனில், தற்காலிக தீர்வுகளுடன் மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இந்தத் தொழில் தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் வகையில் கோழிப்பண்ணை தொழிலுக்கென தனியான ஒரு ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கொங்கு மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக் கொண்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications