முழு ஊரடங்கு அறிவித்த 6வது மாவட்டம்.. இன்று மாலை முதல் தேனி மாவட்டத்தில் முழு லாக்டவுன்.. அதிரடி
சென்னை: தேனி மாவட்ட நகர்ப்பகுதிகளில் ஜூன் 24ம் தேதியான இன்று மாலை 6 மணியிலிருந்து மறு அறிவிப்பு வெளியாகும் வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம், கூடலூர், சின்னமனூர் மற்றும் தேனி நகராட்சிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வெளியாகும் வரை முழு பொது முடக்கம் தொடரும் என்று நேற்று மாலை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்டெயின்ட்மென்ட் பகுதி
கட்டுப்பாட்டு மையங்களில், இறைச்சி கடைகள் இயங்குவதற்கு அனுமதி கிடையாது. டீக் கடை, பேக்கரி, நகைக்கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை இயங்க அனுமதி கிடையாது. மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

உணவகங்கள்
உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவையுடன் மட்டுமே அனுமதிக்கப்படும். மருத்துவ சேவைக்கு மட்டும் ஆட்டோ, டாக்சி தனியார் வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படும். நாளை முதல், பொது பேருந்து சேவையும் பாதியாக குறைக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

எவையெல்லாம் முழு ஊரடங்கு மாவட்டங்கள்
ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதை அடுத்து ஜூன் 23ம் தேதி இன்று நள்ளிரவு 12 மணி முதல், மதுரை மாவட்டத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தற்போது இந்தப் பட்டியலில் தேனி மாவட்டம் இணைந்துள்ளது.

பிற மாவட்டங்கள்
இதேபோல, தூத்துக்குடி, திருவண்ணாமலை போன்ற கொரோனா பரவல் வேகமாக இருக்கக்கூடிய, பிற மாவட்டங்களிலும், முழு ஊரடங்கு அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications