மக்களே.. தமிழகத்தில் எவையெல்லாம் ரெட், ஆரஞ்சு, பச்சை ஜோன்கள்.. வெளியானது லிஸ்ட்!
சென்ன்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு லிஸ்டில் உள்ளதாகவும் ஒரு மாவட்டம் மட்டும் பச்சை லிஸ்டில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. அவற்றின் விவரங்களை இப்போது பார்ப்போம்.
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 3ம் தேதியுடன் நிறைவு பெறறுகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்த மாவட்டங்களை மத்திய அரசு மூன்று வண்ணங்களாக பிரித்துள்ளது. அதாவது சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தி உள்ளது,
மே 4 தேதி முதல் பச்சை மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆரஞ்சு மாவட்டங்களில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சிவப்பு மண்டலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில் மத்திய அரசு 740 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தி உள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களில் உள்ளன. இதேபோல் தேனி, கோவை, கடலூர் உள்பட 24 மாவட்டங்கள் ஆரஞ்சு லிஸ்டில் உள்ளதாகவும் ஒரு மாவட்டம் மட்டும் பச்சை லிஸ்டில் உள்ளது.

12 மாவட்டங்கள்
சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.இங்கு மே4ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது

24 மாவட்டங்கள்
தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்பரம், கோவை, கடலூர், சேலம் கருர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் தருமபுரி என 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளன. இங்கு மே 4ம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி
பச்சை மண்டலங்கள் : தமிழகத்தில் பச்சை மண்டலங்கள் என்ற லிஸ்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே உள்ளது. இங்கு கொரோனா யாருக்கும் பாதிக்கவில்லை எனவே இந்த ஒரு மாவட்டத்தில் மே 4ம் தேதி முதல் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு குறித்து நாளை மே 2ம் தேதி முதல்வர் அமைச்சரவை ஆலோசனைக்கு பின்னர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications