BREAKING NEWS LIVE: புயல் பாதித்த இடங்களில் அத்தியாவசிய பொருள் விலை ஏற்றம்
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.வேதாரண்யத்தில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் கரையை கடந்ததை அடுத்து தமிழகம் முழுக்க கனமழை பெய்து வருகிறது.

சாலை இணைப்பு முழுக்க துண்டிப்பு
பிற ஊர்களில் இருந்து வேதாரண்யம் செல்ல 6 மணி நேரம் ஆகிறது
புயல், மழையால் பல வீடுகள் இடிந்து விழுந்தன
மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் சேதமடைந்ததால் கலக்கம்
கூடுதலாக பேரிடர் மீட்பு படையினர் விரைய வேண்டும் என மக்கள் கண்ணீர்
உணவு, மருத்துவ உதவி கேட்டு கூக்குரலிடும் வேதாரண்யம் மக்கள்
மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் கன, மிக கன மழைக்கு வாய்ப்பு
மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்
தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் 18ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்
19, 20 தேதிகளில் இது தென் மேற்கு கடலில் நிலவும்
அக்டோபர் 1 முதல் இதுவரை தமிழகம், புதுச்சேரியில் 25 செமீ மழை பதிவாகியுள்ளது
இதே காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 29 செமீ ஆகும்
திமுகவினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - ஸ்டாலின்
கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு
— M.K.Stalin (@mkstalin) November 16, 2018
மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) November 16, 2018

தமிழகம் முழுக்க சுவர், வீடுகள் இடிந்து விழுந்து 13 பேர் பலி
பட்டுக்கோட்டை சிவக்கொல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
தஞ்சை அதிராமப்பட்டினத்தில் வீடு இடிந்து பெண் குழந்தை பலி
கடலூரில் சுவர் இடிந்து பெண் ஒருவர் பலி
கடலூரில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் பலி
திருவண்ணாமலையில் சிறுமி ஒருவர் சுவர் இடிந்து பலி
போர்க்கால அடிப்படையில் பாதிப்புகள் சரி செய்யப்படும் - முதல்வர் பேட்டி
நேரில் போய்ப் பார்வையிட்ட பிறகுதான் உண்மையான சேத விவரம் தெரிய வரும்- முதல்வர்
முழுமையான விவரம் கிடைத்ததும் மத்திய அரசின் உதவி கோரப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து பணியாற்றியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் 3 நாட்களுக்கு முன்பே மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் - முதல்வர்
புயலாக வலு குறைந்துள்ளதால் கன மழை, மிக கன மழையை எதிர்பார்க்கலாம்
அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்
கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினத்தில் தலா 17 செமீ மழை பெய்துள்ளது
நெய்வேலி 14 செமீ, விருத்தாச்சலம், செங்கல்பட்டு தலா 12 செமீ மழை பெய்துள்ளது
காஞ்சிபுரம், சென்னையில் தலா 10 செமீ மழை பெய்துள்ளது
தாம்பரத்தில் 2 செமீ மழை பெய்துள்ளது - வானிலை மையம்
கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்துள்ளது
பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்வதால் இயல்பு நிலை பாதிப்பு
பழனி சாலை, வத்தலகுண்டு சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு
கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வெளியில் வர முடியாமல் தவிப்பு
கொடைக்கானல் பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் பெரும் அவஸ்தை













Click it and Unblock the Notifications