கஜா புயலால் பெரும் காற்று.. ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது.. மக்கள் பீதி
கஜா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கி உள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கி உள்ளது.
இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது. கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

இரவு 12 மணியில் இருந்து 3 மணிக்கு இடையில் கஜா புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
இந்த நிலையில் தற்போது பல மாவட்டங்களில் காற்று வீசி வருகிறது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் திடீர் என்று கடல் உள்வாங்கி உள்ளது. 100 மீட்டர் தூரம் வரை நிலப்பகுதி வெளியே உள்ளது. பெரும் காற்று வீசும் நேரத்தில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.

அதேபோல் அங்கு கடலும் பெரிய அளவில் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பெரும்பாலான படகுகள் தரை தட்டியது. இதனால் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.
அதிகமான காற்று வீசிய அதிராம்பட்டினம் சேத வீடியோ#GajaCycloneUpdates #CycloneGaja pic.twitter.com/66V0XH0shn
— Oneindia Tamil (@thatsTamil) November 16, 2018












Click it and Unblock the Notifications