புதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது!
கஜா புயலின் வேகமும் திடீர் என்று அதிகரித்துள்ளது.
Recommended Video
சென்னை: கஜா புயலின் வேகமும் திடீர் என்று அதிகரித்துள்ளது. தற்போது இந்த புயல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது .
கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது.
கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும். ஆனால் கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
[வலுப்பெறும் கஜா புயல்.. நாசா வெளியிட்ட மாஸ் புகைப்படம்.. எப்படி இருக்குன்னு பாருங்க! ]
குறைவான வேகம்
நேற்று மாலையில் இருந்தே குறைவான வேகத்திலேயே கஜா புயல் பயணித்தது. அதிகபட்சம் 10 கிலோ மீட்டர் வேகம் வரை எட்டியது. இன்று காலை முழுக்க 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்தது.
அதிகமானது
இந்த நிலையில் புதிய திருப்பமாக கஜா புயல் வேகம் திடீரென்று அதிகரித்துள்ளது. கஜா புயல் சில நிமிடம் முன்பு வரை 14 கிமீ வேகத்தில் சென்றது. தற்போது 25 கிமீ வேகத்தில் நகர்கிறது. காலையில் 6 கிமீ வேகத்தில் மட்டுமே நகர்ந்தது பின் 8 கிலோ மீட்டராக அதிகரித்தது.
எப்போது கரையை கடக்கும்
கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கலாம். முதலில் மாலை கரையை கடக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
குழப்பம்
இந்த கஜா புயல் வானிலை மையத்தை தொடக்கத்தில் இருந்தே குழப்பி வருகிறது. முதலில் ஸ்ரீஹரிகோட்டா அருகே இந்த புயல் கடக்க இருந்தது. அதன்பின் சென்னை கடலூர் அருகே கடக்கும் என்று கூறப்பட்டது. இப்போது பாம்பன் கடலூர் அருகே கடக்க உள்ளது. இந்தநிலையில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.