கஜா புயல் முன்னெச்சரிக்கை.. அதிகாரிகளுடன் இன்று தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை
கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாரிகளுடன் இன்று தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார்.
Recommended Video
சென்னை: கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாரிகளுடன் இன்று தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார்.
கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது புயலாக உருவாகி உள்ளது. இதற்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சென்னையை நோக்கி வந்து கொண்டு இருப்பதால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இந்த புயல் இன்னும் பெரிய அளவில் தீவிரம் அடையவில்லை.
சென்னையில் இருந்து 850 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல் உள்ளது. 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்த புயல் சென்னையை நோக்கி வந்து பின் ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையை கடக்க உள்ளது. சென்னைக்கு அருகே வரும் போது 120 கிமீ வரை காற்றின் வேகம் வீச வாய்ப்புள்ளது. இது பெரிய பாதிப்ப ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாரிகளுடன் இன்று தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார்.
ரெட் அலர்ட், கஜா, கனமழை .. 20 தொகுதிகளின் தேர்தலும் தள்ளி போகுமா?
பல துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்துகிறார். மாலை இந்த ஆலோசனை கூட்டம் நடக்கும்.
புயல் மற்றும் மழைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் சிலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.