கஜா புயல் நடவடிக்கை.. தமிழக அரசு நன்றாக செயல்பட்டுள்ளது.. ஸ்டாலின் பாராட்டு!
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார்.
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மிக துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது, கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.
வேதாரண்யத்தில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மிகவும் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது. இது பல தரப்பில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த நிலையில் கஜா புயல் குறித்த கருத்து தெரிவிக்காமலிருந்த திமுக தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. தமிழக அரசு முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!
புரட்டி எடுத்த கஜா புயல்.. தமிழகம் முழுக்க 13 பேர் பலி!
கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு
— M.K.Stalin (@mkstalin) November 16, 2018
மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்!
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) November 16, 2018
அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்! அரசுடன் திமுகவினரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். வேறுபாடு பார்க்காமல் எல்லோரும் சேர்ந்து பணி செய்ய வேண்டும். திமுகவினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.