வாழும் காந்திகள்: 85 வயதிலும் சுறுசுறுப்பு.. 50 காசுக்கு இட்லி.. அசத்தும் காந்திமதி பாட்டி!
Recommended Video
சென்னை: மகாத்மா காந்தியை மறக்க முடியாது.. அவர் செய்த தியாகத்தை மறக்க முடியாது.. அவரது தன்னலமற்ற போராட்டத்தை மறக்க முடியாது.. அவரை நினைவு கூறும் அதே நாளில் நம்முடன் வாழும் காந்திகளையும் நாம் கெளரவிக்க வேண்டும்.
வாழ்க்கை மிக மிக சுருக்கமான ஒரு காலம். வாழும் காலத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன செய்தோம் என்பதுதான் நமது வரலாறாக மாறுகிறது. ஒவ்வொருவரும் ஏதாவது செய்யத்தான் துடிக்கிறார்கள். சிலருக்கு அதற்கான வாய்ப்புகள் எளிதாக அமையும், சிலருக்கு போராடிக் கிடைக்கிறது. சிலருக்கு கடைசி வரை கிடைக்காமலேயே போய் விடுகிறது.

திருச்சி காந்திமதியைப் பற்றி இங்கு பார்க்கப் போகிறோம். திருச்சி தாரநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார் காந்தி மதி. பாட்டிக்கு இப்போது 85 வயதாகிறது. அந்தக் காலத்துப் பாட்டி என்பதால் மனசு முழுவதும் ஈரம் மிக மிக அதிகம். பாசமும், அன்பும், கூடவே வாஞ்சையும் நிரம்பி புன்னகை தவழ இருக்கிறார் காந்திமதி பாட்டி.
தனது 83வது வயது வரை இட்லி வியாபாரம் செய்து வந்தவர் காந்திமதி. கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் இட்லி வியாபாரம் செய்தவர். விலை ஒன்றும் அதிகம் இல்லை. ஆரம்ப காலத்தில் ஒரு இட்லி 50 பைசாதான். பின்னர் பொருட்கள் விலை உயர்வால் 1 ரூபாயாக உயர்த்தினார். கடைசி வரை அதே விலைதானாம்.
மலிவான விலை என்றாலும் கூட இட்லியில் சுவை குறையாது. சூப்பராக இருக்கும். இவருக்கென்று தனி கஸ்டமர்கள் உண்டு. காசு இல்லாதவர்களிடம் காசு வாங்க மாட்டாராம். சாப்பிட்டுட்டுப் போப்பா என்று அன்புடன் அனுப்பி வைப்பாராம். எல்லோருக்கும் பிடித்த காந்திமதி பாட்டியை அனைவரும் அழைப்பது காந்தி ஆச்சி என்றுதான்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று தன்னாலான திருப்திகரமான ஒரு சின்ன சேவையை ஆற்றி தற்போது ஓய்வில் இருந்து வரும் காந்திமதி பாட்டியை வாழ்த்தி அவரது ஆசி பெற்று மகிழ்வோம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications