"மெரினாவில் காந்தி சிலையை காணோமே.." வாக்கிங் சென்ற சென்னைவாசிகளுக்கு ஒரே குழப்பம்! என்னாச்சு
சென்னை: தலைநகர் சென்னையில் இன்று காலை வாக்கிங் சென்றவர்கள் மெரினா கடற்கரையில் காந்தி சிலை வழக்கமாக இருக்கும் இடத்தில் இல்லாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 2015 முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இப்போது தலைநகர் சென்னையில் நீல மற்றும் பச்சை என்று இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ இயங்கி வருகிறது.
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை நீல வழித்தடத்திலும், பரங்கிமலை முதல் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயங்கி வருகிறது.

சென்னை
இந்த இரு வழித்தடங்களில் 40+ மெட்ரோ நிலையங்கள் இருக்கிறது. பெட்ரோல் விலை ஏற்றம், போக்குவரத்து நெரிசல், வானிலை என்று பல காரணங்களால் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே இப்போது இரண்டாம் கட்ட மெட்ரோ விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

மெட்ரோ
மாதவரம் - சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் - சோழிங்கநல்லூர் என்று 3 வழித்தடங்களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. நகரில் இப்போது பல்வேறு பகுதிகளில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூந்தமல்லி பைபாஸ்- கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ கட்டுமானம் நடந்து வருகிறது.

இடமாற்றம்
இதற்குத் தமிழக அரசும் கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. இப்போது சென்னை மெரினாவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காந்தி சிலை அமைந்த பகுதியில் இருந்து 20 அடி தொலைவில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ கட்டுமான பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அது பழைய இடத்திலேயே வைக்கப்பட உள்ளது.

எங்கே
ராட்சத இயந்திரங்கள் மூலம் கட்டுமான பணிகள் நடக்கும் போது, காந்தி சிலை சேதமடையக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதே சர்வீர்ஸ சாலையில் 15 முதல் 20 அடி தொலைவில் கட்டுமானத்தால் காந்தி சிலை பாதிக்கப்படாத இடத்தில் இந்த சிலையை வைத்துள்ளனர். இன்று காலை வழக்கம் போல பீச்சுக்கு வாக்கிங் சென்றோர் வழக்கமாகக் காந்தி சிலை இருக்கும் இடத்தில் அது இல்லாததால் குழப்பமடைந்தனர்.

சென்னைவாசிகள்
அதன் பின்னரே, என்ன விஷயம் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். மெட்ரோ ரயில் கட்டுமானம் இப்போது சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ கட்டுமானம் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட மெட்ரோ வரும் 2026ஆம் ஆண்டு முதல் படிப்படியாகப் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications