விநாயகர் சதுர்த்தி.. பொது இடங்களில் சிலை வைக்க தடை.. தமிழகம் முழுக்க போலீசார் குவிப்பு!
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க பொது இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுக்க இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இந்த விழா இன்று நடக்கிறது. இதற்காக நாடு முழுக்க மக்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் பெரிய பெரிய விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவார்கள். அதன்பின் 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் கழித்து அதை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் அல்லது ஆற்றில் கரைப்பார்கள்.
ஆனால் தமிழகத்தில் விநாயகர் சிலையை பொதுவில் வைக்க தடை உள்ளது. கொரோனா பாதிப்பு நிலவி வருவதால், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னை ஹைகோர்ட்டும் தமிழக அரசின் தடையை நீக்க மறுத்துவிட்டது. அதே சமயம் வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்றும், மெரினா கடற்கரை தவிர்த்த பிற இடங்களில் சிலையை சமூக இடைவெளியுடன் கரைக்கலாம் என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க பொது இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்க கூடாது, தடையை மீறி சிலைகளை கொண்டு செல்ல கூடாது என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications