“கத்துக்குட்டி ஆடு”..அண்ணாமலை ஒரு மோசடி! ஓபிஎஸ்+டிடிவி+பாமகவுக்கு ஒரு தொகுதியும் கிடைக்காது -காயத்ரி
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவுடன் ஓபிஎஸ், டிடிவி, பாமக கூட்டணி அமைத்தால் ஒரு தொகுதி கூட கிடைக்காது என பாஜக முன்னாள் நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "பாமக, தேமுதிக, அமமுக, ஐஜேகே, புதிய தமிழகம் கட்சி, ஓ.பி.எஸ் கட்சி இந்த என்டிஏ கூட்டணிக்கு அண்ணாமலையை தலைவராக்க ஏற்பார்களா, ஆதரவு அளிக்குமா? அண்ணாமலையை பாஜக மறைமுகமாக ஊக்குவிக்கும். வளர்ப்பு தந்தை அவரை எல்லா வகையிலும் காப்பாற்ற முயற்சிப்பார். அண்ணாமலை தலைமையில் அனைத்து கட்சிகளும் செயல்படுமா? அண்ணாமலை தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் என்பதைச் சொல்லாமல் சொல்ல வேண்டும் என்பது பாஜகவின் வியூகம்.

இந்த கத்துக்குட்டி ஆட்டின் கீழ் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும், இது அண்ணாமலையின் வார் ரூம் அனைவருக்கும் புரியவில்லை. இந்த கத்துக்குட்டி அண்ணாமலை ஏற்றுக்கொண்டார் என்றால் எல்லோரும் சிரிப்பார்கள், இது வட இந்தியா அல்ல, இது தமிழ்நாடு. எல்லோரும் தன்னை ஒரு தலைவராக ஆதரிப்பார்கள், அவரை ஒரு தலைவராகப் பார்ப்பார்கள் என்று அண்ணாமலை நீண்ட காலமாக இந்த உத்தியைக் கனவு காண்கிறார்.
அண்ணாமலை மிகப்பெரிய மோசடி என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். பார்த்து சிரித்துவிட்டு செல்வார்கள். 2024 தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வைத்து பாமக, தேமுதிக, அமமுக அல்லது ஓபிஎஸ் கட்சி அல்லது ஏதேனும் ஒரு கட்சி வெற்றி பெற முடியுமா? குறைந்தபட்சம் ஒரு தொகுதி? இல்லை அவர்களால் முடியாது. அவர்களால் பாஜக அண்ணாமலைக்கு வாக்குப் பங்கைக் மட்டுமே கொண்டு வர முடியும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.
குறிப்பாக பாஜக அல்லது அண்ணாமலை தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் அவர்களால் வெற்றி பெற முடியுமா? 2026 தேர்தலில் ஒரு கத்துக்குட்டியை தலைவராக்க, மற்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அனைவரும் கைகோர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அண்ணாமலை வெற்றி வாய்ப்பை கெடுத்துவிட்டதால் பாஜகவை விட்டுவிடுவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அதிமுகவுடன் செல்வது பாதுகாப்பானது.
2024 தேர்தலில் பாஜக முதலில் வெற்றி பெற வேண்டும் அமைச்சர்கள் அல்லது ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு வாக்குறுதி அளிப்பதற்கு, தாராள பிரபு போல அள்ளி அள்ளி அனைத்து வாக்குறுதிகளும் தில்லுக்கு துட்டாக வழங்கப்படுகின்றன. வெற்றி வாய்ப்புகளுக்கு இதில் "என்றால்" மட்டுமே உள்ளது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications