ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் உட்கார இடம் பிடிப்பது அவ்வளவு ஈஸியில்லை.. அது தவம் சார்.. பாருங்க
சென்னை: ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் உட்கார இடம் பிடிப்பது அவ்வளவு ஈஸியில்லை.. அதுவும் மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலோ, திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலிலோ, கோவை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலிலோ பொதுப்பெட்டியில் உட்கார இடம் பிடித்தால் அவர்களுக்கு அது வாழ்நாள் சாதனை தான்.. தமிழக ரயில்கள் மட்டுமல்ல பெரும்பாலான ரயில்களில் இதுதான் நிலை.. இந்த வீடியாவை பாருங்கள்..
இந்தியாவில் பயணங்களை பொறுத்தவரை, ஆம்னி பேருந்துகளிலோ அல்லது விமானங்களிலோ பயணிப்பதை நினைத்தே பார்க்க முடியாது. ரயிலில் செல்வது தான் பாதுகாப்பானது மட்டுமல்ல.. பட்ஜெட்டும் ஒத்துவரும். அரசு பேருந்துகளில் ஒருவர் பயணிக்கும் கட்டணத்தில் ஒரு குடும்பமே சென்னையில் இருந்து மதுரைக்கோ, கோவைக்கோ ரயிலில் போய்விட முடியும்.. ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் அதாவது முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணித்து ஊருக்கு சென்றால், நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஆனால் துரதிஷ்டவசமாக மக்களுக்கு போதுமான ரயில்கள் விடப்படுவது இல்லை.. இதன் காரணமாக பலருக்கும் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்பது என்பது வரமாக இல்லாமல் சாபமாக இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கும், சொந்த ஊரில் இருந்து ஞாயிறு அன்று சென்னைக்கும் வருவது என்பது ஏழை மக்களுக்கு மிகவும் வலி மிகுந்த பயணம் ஆகும். இதேபோல் சுபமுகூர்த்த தினங்கள், தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்பட பல்வேறு பண்டிகைகளின் போது ஊருக்கு செல்வது என்பது எளிதானது அல்ல. அப்போது எல்லாம் ரயிலில் கால் வைக்க கூட இடம் கிடைக்காது.
After a long Struggle she got a place to SIT
— THE TRUTH SEEKER (@Unmai_Thedi) September 26, 2024
💔 pic.twitter.com/iQO8nFTgvP
கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் பிடித்த ரயில் பயணம், சுகமாக இல்லாமல் பெரும் சுமையாகவும், வேதனையாகவும் மாறி உள்ளது. படுக்கை வசதி பெட்டிகள் அதிகரிக்கப்படாதது, ஒவ்வொரு ஊருக்கும் தேவையான சாதாரண ரயில்களை இயக்காதது போன்ற காரணங்களால் ரயிலில் எப்போதுமே கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. மக்கள் போதிய ரயில் சேவை வசதி இல்லாத காரணத்தால், கடும் நெரிசலில் உட்கார இடம் இல்லாமல் பல மணி நேரம் ரயில்களில் நின்று வருகிறார்கள்.
இந்நிலையில் ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் உட்கார இடம் இல்லாமல் தவித்த பெண் பயணி ஒருவர், ஒருவழியாக போராடி இடம் பிடித்தார். ரயிலில் மேல் பகுதியில் கஷ்டப்பட்டு ஏறி அமர்ந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications