ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் உட்கார இடம் பிடிப்பது அவ்வளவு ஈஸியில்லை.. அது தவம் சார்.. பாருங்க
சென்னை: ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் உட்கார இடம் பிடிப்பது அவ்வளவு ஈஸியில்லை.. அதுவும் மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலோ, திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலிலோ, கோவை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலிலோ பொதுப்பெட்டியில் உட்கார இடம் பிடித்தால் அவர்களுக்கு அது வாழ்நாள் சாதனை தான்.. தமிழக ரயில்கள் மட்டுமல்ல பெரும்பாலான ரயில்களில் இதுதான் நிலை.. இந்த வீடியாவை பாருங்கள்..
இந்தியாவில் பயணங்களை பொறுத்தவரை, ஆம்னி பேருந்துகளிலோ அல்லது விமானங்களிலோ பயணிப்பதை நினைத்தே பார்க்க முடியாது. ரயிலில் செல்வது தான் பாதுகாப்பானது மட்டுமல்ல.. பட்ஜெட்டும் ஒத்துவரும். அரசு பேருந்துகளில் ஒருவர் பயணிக்கும் கட்டணத்தில் ஒரு குடும்பமே சென்னையில் இருந்து மதுரைக்கோ, கோவைக்கோ ரயிலில் போய்விட முடியும்.. ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் அதாவது முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணித்து ஊருக்கு சென்றால், நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஆனால் துரதிஷ்டவசமாக மக்களுக்கு போதுமான ரயில்கள் விடப்படுவது இல்லை.. இதன் காரணமாக பலருக்கும் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்பது என்பது வரமாக இல்லாமல் சாபமாக இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கும், சொந்த ஊரில் இருந்து ஞாயிறு அன்று சென்னைக்கும் வருவது என்பது ஏழை மக்களுக்கு மிகவும் வலி மிகுந்த பயணம் ஆகும். இதேபோல் சுபமுகூர்த்த தினங்கள், தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்பட பல்வேறு பண்டிகைகளின் போது ஊருக்கு செல்வது என்பது எளிதானது அல்ல. அப்போது எல்லாம் ரயிலில் கால் வைக்க கூட இடம் கிடைக்காது.
After a long Struggle she got a place to SIT
— THE TRUTH SEEKER (@Unmai_Thedi) September 26, 2024
💔 pic.twitter.com/iQO8nFTgvP
கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் பிடித்த ரயில் பயணம், சுகமாக இல்லாமல் பெரும் சுமையாகவும், வேதனையாகவும் மாறி உள்ளது. படுக்கை வசதி பெட்டிகள் அதிகரிக்கப்படாதது, ஒவ்வொரு ஊருக்கும் தேவையான சாதாரண ரயில்களை இயக்காதது போன்ற காரணங்களால் ரயிலில் எப்போதுமே கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. மக்கள் போதிய ரயில் சேவை வசதி இல்லாத காரணத்தால், கடும் நெரிசலில் உட்கார இடம் இல்லாமல் பல மணி நேரம் ரயில்களில் நின்று வருகிறார்கள்.
இந்நிலையில் ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் உட்கார இடம் இல்லாமல் தவித்த பெண் பயணி ஒருவர், ஒருவழியாக போராடி இடம் பிடித்தார். ரயிலில் மேல் பகுதியில் கஷ்டப்பட்டு ஏறி அமர்ந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications