தவெகவுடன் கூட்டணி.. ராகுல் சொன்னது என்ன.. கிரிஷ் சோடங்கர் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. தவெகவுக்கு முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. தவெகவுக்கு நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து கூட்டணியும் அமைத்துள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைத்தது பற்றி காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர் விளக்கமளித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பனையூரில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். அப்போது அவர், "எங்கள் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜனா கார்கே, வேணுகோபால் ஆகியோருடன் ஆலோசனை செய்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முக்கிய முடிவு செய்துள்ளது. எங்கள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் இணைந்து தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளோம்.

Girish chodankar

தவெக ஆதரவு ஏன்

தவெக ஆட்சியமைக்க முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளோம். இதை சாத்தியப்படுத்தியதற்கு உறுதுணையாக இருந்த எங்கள் தலைவர்களுக்கு நன்றி. இதற்கான கடிதத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். எங்களை போல மேலும் சில கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாடு மக்கள் நலனுக்கு இது மிகவும் அவசியமாகிறது. கடிதம் கொடுத்தவுடன் ராகுல் காந்தியிடம் தெரிவித்தோம். அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தவெகவுக்கு நாங்கள் வெளியில் இருந்து மட்டும் ஆதரவளிக்கவில்லை. புதிதாக பொறுப்பேற்கவுள்ள தவெக அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும். ஆட்சியில் நாங்களுகும் பொறுப்பெடுத்து மக்கள் நலனுக்காக செயல்படுவோம். மக்கள் நலம் தான் முக்கியம். முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். முதலமைச்சராக அவரின் பணி சிறக்க வாழ்த்துகள். ஆளுநர் விரைவில் ஆட்சியமைக்க அவரை அழைக்க வேண்டும்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+